தவ்ஹீத் ஜமாஅத் video's: நடுநிலை அறிஞர்களும்.. விமர்சிக்கும் ஸலபுகளும்.

நடுநிலை அறிஞர்களும்.. விமர்சிக்கும் ஸலபுகளும்.

 நடுநிலை அறிஞர்களும்.. விமர்சிக்கும் ஸலபுகளும்.


எழுதியவர் சகோ : Ahmed Jamsath Ahamedsha அஸ்ஹரி

அறிஞர் பி ஜே ஒரு "முதக்கப்F", "தகி", "முப்திஃ"

ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே ஒரு முப்ததிஃ (பித்அத்வாதி)

 சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே ஒரு முப்திஃ (Thinking out of the box, வித்தியாசமாக சிந்திக்கும் திறமை உள்ளவர், முன்பு எவரும் சொல்லாத வகையில் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர், )
ابتكار ، إيجاد شيء غير مسبوق,قوَّة الإبداع : قوَّة الابتكار والخَلْق
(அல் வஸீத் அகராதி)

ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே ஒரு ஜாஹில்.வாசிப்பில்லாமல் பேசுகிறார்

சவூதி பேராசிரியர்கள்: அவ்வாறு சொல்லாதீர்கள், அறிஞர் பி ஜே மிகப்பெரும் ஆய்வாளர், அவர் ஒரு தகி (ذكي), குர்ஆனை தப்ஸீர் செய்யும் கலை, இஸ்லாமிய கலைகளில் ஆய்வுள்ளவர். கல்வி தேடும் மாணவர் போன்றவரல்ல அவர், அதையும் தாண்டி மிகப்பெரும் ஆய்வாளர்.அவர் ஒரு முதக்கப். அவருக்கு அநியாயம் செய்யாமல் இருக்க இதையே என்னால் கூற முடியும்.
தகி (ذكي) விளங்குவதில் திறமையுள்ளவர்,
கெட்டித்தனமானவர். ذَكِيَّ الفَهْمِ
அதிகமான பயிற்ச்சிகள், ஆராய்சிகள் செய்பவர்
ذكَّى فلانٌ : حَظِيَ بالذكاء لكثرة رياضته وتجاربه
அறிஞர் பி ஜே ஒரு முதக்கப் مُثَقَّف = அறிவிலும், வாசிப்பிலும் விசாலாமான வாசிப்புள்ளவர், மிக ஆழமாக ஆய்வு செய்பவர்.متوسِّع ، مُتبحِّر في الثقافة والمطالعة
(அல் வஸீத் அகராதி)

ஆய்வில்லாத மௌலவிகள்: பி ஜே தர்ஜுமாவை பதிப்புக்கு பதிப்பு திருத்துகிறார்.அது புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு.

சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே அவர்கள் பதிப்புக்கு பதிப்பு திருத்தங்கள் கொண்டுவருவது சிறந்த வழிமுறை என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. அது நல்லதொரு முயற்சியுமாகும்.

ஆய்வில்லாத மௌலவிகள் : பி ஜே யின் தர்ஜுமாவை வாசிக்காதீர்கள்.

சவூதி பேராசியர்கள் :அறிஞர் பி ஜே யின் தர்ஜுமாவில் ஒரு சில தவறுகளை விட்டுவிட்டு அவரது மற்ற தப்சீர்களை தொகுத்து மக்களுக்கு கொடுக்க நாம் பணம் தருகிறோம்.

ஆய்வில்லாத மௌலவிகள்: எவருமே சொல்லாத கருத்தை பி ஜே சொல்கிறார். இது வழிகேடு.

சவூதி பேராசியர்கள் : அறிஞர் பி ஜே எவரும் சொல்லாத கருத்தை சொன்னதாக நீங்கள் சொல்வதில் சிலது முன்னாள் உள்ள அறிஞர்கள் சொன்னவைதான், அது சரியான தப்சீரும்தான். அதில் இன்னும் சிலது முன்னாள் எவரும் ஆய்வு செய்யாதது என்றாலும் அறிஞர் பி ஜே க்கு முன்பு எவரும் சொல்லாத வகையில் ஏற்கத்தக்க வகையில் உள்ள தப்சீராகும். அவற்றை நான் பிரயோசனம் கருதி குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.


==========================================
குறிப்பு:
சவுதியின் ஜுப்பாவையும், அவர்கள் போல தோற்றமும் கொடுத்தால் மட்டும் போதாது அவர்கள் போல நீதியாக விமர்சனம் செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பி ஜே யுடன் முரண்பட்டாலும் அநீதி இழைக்காமல் இருக்கும் அளவு அவரது வாசிப்பின் ஆழத்தையும், ஆய்வின் நுணுக்கத்தையும் அவர்களே குறிப்பெடுத்து வைக்கும் அளவு பி ஜே அவர்களை மதிக்கின்றனர். அவரை அத்துமீறி விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி உள்ளனர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கும் தமிழ் மௌலவிகளே நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஆய்வு செய்ய முயற்சி செய்யுங்கள்,அப்போதுதான் ஒருவரின் ஆய்வின் பெறுமதி என்ன என்று உங்களுக்கு தெரியும். இல்லை என்றால் எந்தவித ஆய்வும் இல்லாத உங்கள் வறண்ட மண்டையால் ஆய்வுகளை பார்த்து அறியாமையில் எதை வேண்டுமானாலும் சொல்வீர்கள்.

உங்கள் சார்பான மௌலவிமார்களை சவுதியர்கள் போல ஆடை உடுத்துவதைவிட்டுவிட்டு கொஞ்சமாவது ஆய்வு செய்ய சொல்லுங்கள். கடைகளில் சென்று சவூதி ஜுப்பாக்களை வாங்கி அணிவதைவிட நூல்களை வாங்கி ஆய்வு செய்ய சொல்லுங்கள். இல்லை என்றால் ஜுப்பாக்களை போட்டு எந்தவித ஆய்வும் இன்றி வெறும் விவாதம் செய்தலும், அடுத்தவர்களை அறிவின்றி விமர்சனம் செய்வதும்தான் இவர்களின் தொழிலாக இருக்குமே தவிர இந்த தமிழ் சமூகத்தில் ஆய்வாளர்களை உருவாக்க எந்த வகையிலும் இவர்களின் இந்த ப்ரோகித தொழில் உதவப் போவதில்லை.

அறிஞர் பி ஜே யை எதிர்ப்பதை மட்டுமே காலத்தை வீணாக்காமல் நீங்களும் ஆய்வு செய்ய முயற்சியுங்கள், உங்கள் மௌலவிமார்களை அறிஞர் பி ஜே யை விமர்சனம் செய்ய முன் ஆய்வு செய்தீர்களா என்று கேளுங்கள். அப்போதுதான் அவர்கள் அதற்கு முயற்சி செய்வார்கள்.

அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் உங்களுக்கும் உங்கள் மௌலவிமார்களுக்கு குர்ஆனை ஆய்வு செய்யும் உணர்வையும், அறிவையும் கொடுக்க போதுமானவன்.

எழுதியவர் சகோ : Ahmed Jamsath Ahamedsha அஸ்ஹரி

share this... https://bit.ly/3WTFXrj

Search This Blog