தவ்ஹீத் ஜமாஅத் video's: நாஸ் விரிவுரை
Showing posts with label நாஸ் விரிவுரை. Show all posts
Showing posts with label நாஸ் விரிவுரை. Show all posts

நாஸ் 1-அத்தியாயத்தின் விரிவுரை- தொடர்-1

 நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை- தொடர்-1

இந்த இரண்டு சூராக்களும் மக்காவில் அருளப்பட்டன என்று பெரும்பாலான குர்ஆன் மொழிபெயர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதா அல்லது மதீனாவில் அருளப்பட்டதா என்பதை சிந்தித்து கண்டுபிடிக்க முடியாது. மக்காவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் மதீனாவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் தகுந்த சரியான நபிமொழியைக் கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். அல்லது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அதைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அதுவும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று எல்லா மொழிபெயர்ப்புக்களிலுமே ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மக்கீ என்றும் மதனீ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில் பெரும்பாலான அத்தியாயங்களுக்கு மக்கியாக இருப்பதற்கோ மதனியாக இருப்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் காணக் கிடைக்கவில்லை. குர்ஆனில் 95 சதவீத அத்தியாயங்களை மக்கீ என்றோ மதனீ என்றோ ஆதாரத்துடன் சொல்லவே முடியாது. மக்காவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான். மதினாவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று பொதுவாக நம்பினால் போதுமானது.

  மேற்சொன்ன அடிப்படையில் பார்த்தால், சூரத்துந் நாஸும் சூரத்துல் ஃபலக்கும் மக்காவில் அருளப்பட்டது என்பதற்கோ மதீனாவில் அருளப்பட்டது என்பதற்கோ எந்தச் சான்றுமில்லை. தமிழகத்தில் சில உலமாக்களால் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்.

நாஸ்2-ஷைத்தானும் இப்லீஸும் ஒன்றா? நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 2

ஷைத்தானும் இப்லீஸும் ஒன்றா? நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 2

ஜின்களுக்கு சொர்க்கம் நரகம் மனிதர்களில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும், தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்களோ அது போலவே ஜின்களிலுள்ள நல்லவர்கள் சுவர்க்கத்திற்கும், அவர்களில் கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (அல்குர்ஆன் : 7:179)

நாஸ் 5-கவிதையில் ஷைத்தான்-தொடர் : 5 ( நாஸ் விரிவுரை )

கவிதையில் ஷைத்தான்-தொடர் : 5

நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை

திருக்குர்ஆனின் சின்னஞ்சிறிய அத்தியாயங்களின் வரிசையில் 113,114 ஆகிய அத்தியாயங்களின் விரிவுரையைப் பார்த்து வருகிறோம். இவ்விரண்டு அத்தியாயங்களும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவதற்குக் கற்றுத்தரும் அத்தியாயங்களாகும். மனித உள்ளங்களில் மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்கிலிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைக் கற்றுத்தரும் வகையில் நாஸ் அத்தியாயம் அமைந்துள்ளது. ஷைத்தான் எப்படி தீய எண்ணங்களைப் போடுவான் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர். கவிதை மூலம் தீய எண்ணம் கவிதை பாடுவதில் மனிதனை ஷைத்தான் இலகுவாகக் கெடுத்து விடுகிறான். உதாரணமாகச் சொல்வதாக இருந்தால், தொழுகையின் சிறப்பைப் பற்றி உரைநடையில் பேசவோ எழுதவோ சொன்னால் அதைப் பற்றி பேசுவோம், எழுதுவோம்.

ஆனால் தொழுகை கூடாது என்பதைப் பற்றிப் பேசச் சொன்னால் நாம் பேச மாட்டோம். ஆனால் கவிஞர்கள் "கூடும்" என்று ஏதேனும் ஒரு விசயத்திற்கு கவிதை எழுதுவார்கள். அதே விசயத்தையே "கூடாது" என்றும் கவிதை வடிப்பார்கள். மதுபானம் கூடாது என்று பேசுவோம். எழுதுவோம். ஆனால் மது குடிப்பது சிறப்பு என்று பேசுவோமா? என்றால் பேச மாட்டோம்.

ஆனால் கவிஞர்கள் நேர் எதிரான இரண்டு கருத்துக்களுக்கும் கவிதை இயற்றுவார்கள். மது குடிப்பதற்கும் கவிதை எழுதுவார்கள். மது குடிக்கக் கூடாது என்பதற்கும் கவிதை எழுதுவார்கள். கடவுள் இருக்கிறான் என்பதற்கும், கடவுள் இல்லை என்பதற்கும் கவிதை பாடுவார்கள். முன்னுக்குப்பின் முரண்படுகிறதே என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். மொழிப் புலமையை மட்டுமே காண்பார்கள். உதாரணமாக சினிமா துறையை எடுத்துக் கொண்டால், ஒரே கவிஞர்கள் தான் பல முரண்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதுவார்கள். ஒரு தடவை சோஷியலிசம் சரி என்பார்கள். இன்னொரு தடவை கம்ப்யூனிசம் தான் வாழ்க்கைக்கு ஒத்துவரும் என்பார்கள். இன்னொரு தடவை முதலாளியிசத்தையும் பாராட்டுவார்கள். ஆபாசத்தை ஒரு பக்கம் விதைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஆபாசத்திற்கு எதிராகவும் கவிதை படிப்பார்கள். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதுபவர்கள் தான் கவிஞர்கள். 

Search This Blog