தவ்ஹீத் ஜமாஅத் video's: அந்த 72 கூட்டத்தினர் யார்
Showing posts with label அந்த 72 கூட்டத்தினர் யார். Show all posts
Showing posts with label அந்த 72 கூட்டத்தினர் யார். Show all posts

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

 கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் கேட்கின்றனர்.

கனவுகள் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.

8- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 8

ஈசா (அலை) அவர்கள் இறங்கி வருவார்களா?

 அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அபூ ஹ‚ரைரா (ரலி) அவர்களிடம் வந்து ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? என வினவிய போது பின்வரும் இந்த வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்றார்.


மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்க üடையே நேர்மையாகத் தீர்ப்பüக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்கüடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ள வற்றையும் விடச் சிறந்ததாக (மக்கüன் பார்வையில்) ஆகிவிடும்.
இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ர-) அவர்கள், " "வேதம் வழங்கப்பட்டவர்கüல் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாüல் அவர் களுக்கெதிராக அவர் சாட்சியம் அüப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
ஆதாரம் புகாரி:3448

7- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -7

அந்த 72 கூட்டத்தினர் யார்
ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் உயர்தி விட்டான் என்பதில்
சந்தேகம் வராமல் இருக்க மேலும் அல்லாஹ் திருக்குர்ஆனின் 4:157,158 ஆகிய இரு வசனங்களும் ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அறிவிக்கின்றது.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படு வதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்'' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.
"அவரை உயர்த்திக் கொண்டான்'' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

6-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் - 6

அந்த 72 கூட்டத்தினர் யார்
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா?

ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்களா என்று ஒரு சந்தேகம் அனைவருக்கும் வரும் இந்த சந்தேகம் வராதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள் அலீ (ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். அப்துல் காதிர் ஜீலானியும் மரணித்து விட்டார்கள். என்று நம்புகிற நாம் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்களா?  என்ற ஒரு சந்தேகம் வரும். அப்படியானால் இதுவும் அந்தக் கொள்கைக் குழப்பத்தில் அடங்கும். நபிமார்களாக இருந்தாலும் அவர் மரணித்தை அடைவார்கள் என்று சரியான கொள்கையாக இருந்தால் இந்த அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களும் மரணித்து விட்டார்கள் என்று ஒரு கருத்திற்குத்தான் வந்தாக வேண்டும்.
ஈஸா (அலை) அவர்கள்  மரணித்து விடவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களுக்கு சொன்னவைகள் என்ன ஆனது என்ற ஒரு கேள்வி எழும்.

ஆனால் நாம் அல்குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதருடைய தூய போதனையும் பின்பற்றக் கூடிய நமது நிலைப்பாடு ஈஸா அவர்கள் மரணிக்க வில்லை என்பதுதான். ஒரு நாள் மரணிப்பார்கள். ஆனால் அவர்களும் அனைவரும் மரணிப்பார்கள் என்ற விதியின் அடிப்படையில் அவர்களும் என்றைக்காவது ஒரு நாள் மரணிப்பார்கள். இனி மரணிப்பார்கள் என்றுதான் நாம் நம்புகிறோமோ தவிர இன்றைய தேதியில் அவர்கள் மரணிக்க வில்லை என்று நாம் நம்புகிறோம்.

5-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5

அந்த 72 கூட்டத்தினர் யார்
 அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5

மேலும், "நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே' "முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக் கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள்.

 
உமர் (ரலி) இவ்வாறு சொல்வது ஆச்சரியமளிக்கின்றது ஏனெனில் அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின் தலைகளை நான் சீவி விடுவேன் என்று சொன்னவர் பின்வருமாறு இந்த செய்தியை அவர்கள் நமக்குக் கூறுகின்றார்கள்.

அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -4

அந்த 72 கூட்டத்தினர் யார்
 அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -4

.... ஏனெனில் அக்கொள்கையைக் கூறக் கூடியவர்கள் இன்றைக்கும் இருக்கலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோன்றி அழிந்து போன அக்கொள்கைக்கு உயிரூட்டக் கூடியவர்கள் இன்றைக்கும் நாளைக்கும் வரலாம். நம்மில் கூட அந்த வழி கெட்ட கொள்கையில் சில கொள்கைகளை சரியென்று நினைத்திருக்காலம். அதனால் நாம் பார்க்க விருப்பது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு தோன்றிய தவறான கொள்கைகள் குர்ஆன் ஹதீஸ்க்கு மாற்றமான சித்தாந்தங்கள். எதுவல்லாம் இஸ்லாத்தின் பெயரால் வந்தது? அதை ஆய்வு செய்வோமையானால் இன்றைக்கும் அக்கொள்கை வேறு ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்தால் நம்மை நாம் அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். இக்கொள்கை அன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட கொள்கை அன்றைக்கு தவறு என்று நிரூபிக்கப்பட்ட கொள்கை இது அல்குர்ஆனின் இத்தனை வசனங்களுக்கு மாற்றமான கொள்கை என்றும் விளங்கிக் கொள்ள முடியும்.

3- அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -3

அந்த 72 கூட்டத்தினர் யார்
நபி (ஸல்) அவர்கள் 72 கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?

நபி (ஸல்) அவர்கள் என்ன வழியைச் சொன்னார்களோ அந்த வழியைத்தான் தேர்வு செய்யவேண்டும். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த ஒரு கூட்டம் எது என்பதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமாக விளக்கி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எழுபத்தி இரண்டு கூட்டத்தினர்களின் பெயர்களைக் கூறினார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிக்கையைத்தான் கூறினார்களே தவிர பெயர்களைக் கூறிப்பிட்டு இன்னின்ன கூட்டம் நரகம் செல்லும் என்று அவர்கள் கூறவில்லை. இது பற்றிய நமக்கு முன்னர் வாழ்ந்து சென்ற அறிஞர்கள் பெருமக்கள் தங்களுடைய காலங்களில் அவர்களுக்கு ஏற்றால் போல் பிரித்துள்ளார்கள்.

2-அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -2

அந்த 72 கூட்டத்தினர் யார்
எது சுவனப் பாதை?

நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில்   நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன.  நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித் தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால்  அவர்கள் காலத்தில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.

Search This Blog