வாயில் வந்த வழிகேடு
இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான ஏகத்துவப் பிரச்சார வரலாற்றையே தீக்கிரையாக்கும் வாதம் ஒன்று சலபி நண்பர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
வாதம் இதுதான்.
//வழி கேட்டின் வாயில்
எந்த வாதங்களுக்கு பதில் இல்லையோ அதுவே சத்தியக்கருத்து
என்பது அடிப்படையில் தவறானது. இஸ்லாம் நிலைத்திருப்பது நம்பிக்கையின் மீதேயன்றி வாதங்களின் மீதல்ல.//
பதில்
1- உலகில் உள்ள அனைத்து மதங்களும் நிலைத்திருப்பது நம்பிக்கையில் தான். ஏதோ இஸ்லாம் மட்டும் நம்பிக்கையில் இருப்பது போலவும் அடுத்த மதங்கள் நம்பிக்கையில் இல்லாது அறிவார்ந்த வாதங்களில் நிலைத்திருப்பது போலவும் அல்லவா நண்பர் வாதிடுகிறார். கல் என்று தெரிந்தாலும் அதைக் கடவுள் என்று நம்புவது வேற லெவல் நம்பிக்கை இல்லையா? இஸ்லாத்துக்கும் அடுத்த மதங்களுக்கும் உள்ள வேறுபாடுபற்றி யோசிக்கவே மாட்டீர்களா?
நாம் எடுத்துவைத்த வாதங்களுக்கு தம்மிடம் பதில் இல்லை. அதைக் கேட்கவும் வேண்டாம் என்று அவர் வாயில் வந்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இது. ‘எங்களிடம் பதில் இருக்கிறது. செத்த பாம்பை அடிக்க மாட்டோம். அரபி தெரியாதவரோடு பேச மாட்டோம்’ என்று சொல்லி ஏதோ தம்மிடம் பதில் உள்ளது போல் பொதுமக்களை ஏமாற்றிய சலபிகளுக்கு செருப்படி கொடுத்துள்ளார் இவர். ‘பதில் இல்லை என்றால் இல்லை என்று சொல்லித் தொலையுங்கள்’ என்று கூறியுள்ளார்.
2- நம்பிக்கையில்தான் மொத்த மார்க்கமும் தங்கியுள்ளது என்றால் இந்த பதில் கூடத் தேவையில்லை. ஒற்றை வரியில் நம்பிவிட்டுப்போ என்று இவர் சொல்லியிருக்க வேண்டும். இந்த வாதத்தை எடுத்துவைத்ததில் இருந்து வாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கருத்தே மேலோங்குகிறது
3- இந்தக் கருத்தை வெளியிட்ட சகோதரர் இதற்கு பிறகு இரண்டு பதிவுகள் போட்டுள்ளார். அதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றுள்ளார். ‘நம்பிவிட்டுப் போ’ என்ற கருத்து இதில் இல்லை. எனவே, தான் வைத்த இந்த வாதம் தவறு என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.
4- இனிமேல் இவர் தன்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் குர்ஆன் வசனத்தை ஹதீசைச் சொல்லி நம்பிவிட்டுப் போ என்று மட்டுமே சொல்ல வேண்டும். இவர்களை single layer இல் சிந்திக்கும் சலபிகள் என்று சொன்னோம். ஆனால் இவர், தான் எந்த layer இலும் சிந்திக்காத சலபி என்று ஒத்துக் கொள்கிறார்.
5- இஸ்லாம் அல்லாஹ்வைப் பற்றி நம்புவதையே அறிந்து நம்புமாறு சொல்கிறது. (47:19) அதை நம்பிவிட்டு ஏனைய ஈமானின் அம்சங்களை நம்புவது வெறும் நம்பிக்கையில் வராது. இப்படிப்பட்ட இறைவன் சொன்னது சரிதான் என்று அறிந்து நம்புவதையே குறிக்கும்.
6- மிஃராஜ் பயணம் என்பது நம்பிக்கை சார்ந்த அம்சம். இதைப்பற்றி மக்கத்து காபிர்கள் கேள்வி கேட்கும் போது ‘உன் வாதத்திற்கு பதில் சொல்லி சத்தியத்தை நிரூபிக்கத் தேவையில்லை. நம்பிவிட்டுப் போ’என்று நபிகளார் சொல்லவில்லை. அனைத்துக் கேள்விக்கும் பதில் சொல்லி மிஃராஜை வாதங்களால் நிரூபித்தார்கள்.
7- நபிக்கு யாரோ குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்ற காபிர்களின் வாதத்துக்கு அல்லாஹ் ‘வஹியை நம்பிவிட்டுப் போ’ என்று சொல்லவில்லை.
“யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்” என்று அல்லாஹ் பதில் சொல்லவில்லையா?
16:103.
இப்படி மொத்தக் குர்ஆனில் உள்ள மிக அதிமான வசனங்கள் எதிரிகள் கேட்கும் கேள்விக்கு பதிலாகத்தானே இருக்கிறது. உதாரணமாக 3:65-67, 7:195-198,43:19,43:23-24,2:170,67:10,2:111,21:24,34:46,10:16,6:101,18:05,46:4.
8- சொன்னால் நம்பிவிட்டுப் போ என்பதுதான் மார்க்கம் என்றால் ஒரு தவறை நிரூபிக்க சாட்சிகளும் வாதங்களும் எதற்கு? சொன்னால் நம்பவேண்டியது தானே. புகாரி இமாம் ஹதீஸ் தனக்குக் கிடைத்த வழியை நிரூபிக்க ஏன் அறிவிப்பாளரைச் சொல்ல வேண்டும். நான் சொல்கிறேன் நம்பிவிட்டுப் போ என்று சொல்லலாம் அல்லவா?
9- அனைத்து மதத்தில் இருந்தும் இஸ்லாம் வேறுபடும் அம்சம் என்ன? மற்றைய மதங்கள் வெறும் நம்பிக்கையை மட்டும் பேசும். இஸ்லாம் மட்டுமே தனது கொள்கையை நிரூபித்துக் காட்டும். அதனால் தானே குர்ஆன் சவால் விடுகிறது. இதைப்போல் ஒன்றைக் கொண்டுவா என்றும், முடியுமானால் முரண்பாட்டைக் காட்டு என்றும் சவால் விடுகிறானே தவிர ‘நம்பிவிட்டுப் போ’ என்று அல்லாஹ் சொல்லவில்லை.
10- கப்று வணங்கி உட்பட அனைத்து மதத்தினரும் இதையே சொல்லி தங்கள் வாதங்களை நிரூபிக்கலாமே.
‘கல்லுக்கு விளங்குமா? இறந்தவர் கேட்பாரா’ என்று நீங்கள் கேட்டால்’ அவர்களும் நீங்கள் சொல்வது போல் ‘வாதத்திற்கு பதில் இல்லாமல் இருப்பது சத்தியக் கருத்தல்ல. எம் மதம் நிலைத்திருப்பது நம்பிக்கையிலன்றி வாதத்தில் அல்ல’ என்று பதில் சொன்னால் அவன் கூற்று சரியா? உங்கள் மடமைக்கு அளவே இல்லையா? தவ்ஹீதை எங்கே கொண்டுபோய் நிறுத்திவிட்டீர்கள். தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள்
உங்கள் உலமாக்கள் இந்த நிமிடம் வரை வழிகெட்ட கொள்கையுடையவர்களிடம் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? அவன் கேள்விக்கு உங்கள் உலமாக்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். ‘நம்பிவிட்டுப் போ’ என்ற ஒற்றை வரியில் முடிக்கலாமே
11- நாம் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்று ஒத்துக் கொள்ளுங்கள். இஸ்லாம் மார்க்கத்தில் கூட பதில் இல்லை என்று உங்கள் இயலாமையை மார்க்கத்தை காட்டி மறைக்காதீர்கள். ஒரு மடத்தனமான கண்முடிப் பின்பற்றும் ஒரு சமுதாயத்தை எங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் உருவாக்காதீர்கள்.
12- யார் என்ன வாதம் வைத்தாலும் இதற்குப் பிறகு நீங்கள் வாதத்திற்கு பதில் சொல்லி நிரூபிக்கக் கூடாது. ‘நம்பினால் நம்பு. இல்லாவிட்டால் போ’ என்று சொல்லவேண்டும்.
13- உங்களிடம் பதில் இல்லாமையால், ஒருபுறம் எங்கள் கேள்விக்கு சலபு இமாம்களின் பதிலைப் பார்க்கச் சொல்கிறீர்கள். மறுபுறம் பதில் சொல்லி நிரூபிக்கத் தேவையில்லை என்கிறீர்கள். எந்த layer இல் நீங்கள் சிந்திக்கிறீர்கள்?
-- Roohul Razmi
கோளாறு எங்கே? 👇
சகாபாக்களைப் பின்பற்றுதல் சம்பந்தமாக எமது நிலைபாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து எழுதப்பட்ட கருத்தொன்று எனது பார்வைக்கு வந்தது.
இது சம்பந்தமான முழு மறுப்பையும் மேலதிக விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்
அவர்களின் வாதம்
// நபிகளார் விளங்கப்படுத்தும் பணியில் குறைகாண்கிறார்கள்.
தங்களுக்கு விளக்கம் அளித்தவரை நபியை விட உயர்ந்த இடத்தில் வைக்கிறார்கள்//
பதில்
நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை இவ்வளவு காலமும் புரியாமல் இருப்பது ஆச்சரியமே.
நாங்கள் என்ன சொல்கிறோம்?
நபிகளார் சொன்ன ஒரு ஹதீசை சகாபாக்கள் புரிந்துதான் அறிவிக்கிறார்கள். நாங்கள் ஹதீசை ஏற்றுக் கொள்வதில் இருந்தே சகாபாக்கள் புரிந்தது சரி என்பதையும் சேர்த்தே ஏற்கிறோம். சகாபாக்கள் மட்டுமல்ல. புகாரி இமாம் உற்பட சகாபி, தாபிஈ, தபஃதாபிஈ என்ற அனைவரினதும் புரிதல் சரி என்பதையும் சேர்த்தே ஏற்கிறோம்.
நபிகளார் சொன்ன அதே வார்த்தையிலும் சிலர் அறிவித்து இருப்பார்கள். சில மாற்றமான சொற்களிலும் அறிவித்து இருப்பார்கள்.
அதனால்தான் ஒரே சம்பவம் பல்வேறு அறிவிப்புகளில் பல விதமான மாற்று சொற்களால் அறிவிக்கப்படுகிறது. நபி சொன்னதை புரிந்து அறிவிப்பதால் தான் அப்படி பல அறிவிப்பு வருகிறது. மாற்றுச் சொல்லால் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் ஏற்றுள்ளோம்.
நாங்கள் மறுப்பது என்ன?
சகாபி சுயமாக சொன்ன ஒன்றைத்தான் மறுக்கிறோம். விளக்கம் என்றாலே ஒருவர் சொன்னதை விளங்கி இன்னொருவர் சொல்வதுதான். சகாபி, நபி சொல்லாத ஒரு கருத்தைச் சொன்னால் அது யாருடைய விளக்கமும் அல்ல. சகாபி தானே சொன்ன சொந்தக் கருத்து. எந்த ஒரு சகாபியும் நபிகளார் சொன்னார்கள் என்று தனது கருத்தைச் நபி மீது சுமத்த மாட்டார்கள்.
உதாரணமாக உமர் ரழி அவர்களின் முத்தலாக் கருத்து நபியின் எந்த ஹதீசின் விளக்கம்? நபி சொன்னதாக ஏனைய சகாபாக்கள் முத்தலாக் பற்றி சொன்னது தானே நபியின் விளக்கம். அதை நாம் ஏற்போம். உமர் ரழி சொன்னது அவர்களின் சொந்தக் கூற்று. இதை மறுப்போம். மிக மிக இலகுவான அடிப்படை இது.
கவ்ஸர் என்று குர்ஆனில் வந்துள்ளதை நபிகளார் விளக்கும் போது அது மஹ்ஷரில் உள்ள ஒரு நீர்த்தடாகம் என்று விளக்குகிறார்கள். இதை பல சகாபாக்கள் விளங்கி அறிவிக்கிறார்கள். அந்த விளக்கத்தை நாம் ஏற்றுள்ளோம். ஆனால் இப்னு அப்பாஸ் அவர்கள் அதற்கு ‘ஏராளமான நன்மை’ என்று விளக்கம் கொடுத்தார்கள். அது நபியின் எந்தக் கூற்றை விளக்குகிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இது நபியின் விளக்கமல்ல. மாறாக இப்னு அப்பாசின் சொந்தக் கூற்று. இதைத்தான் நாங்கள் மறுக்கிறோம். எமது கொள்கை எவ்வளவு தெளிவானது பார்த்தீர்களா?
இவர்களின் அடுத்த வாதம்
//நபியை அனுப்பியது விளங்கப்படுத்துவதற்கே என்ற 16:44 வசனத்தைக் கேள்விக் குறியாக்குகிறார்கள். நபியிடம் மார்க்கம் கற்ற நபித்தோர்ர்களின் மார்க்கப் புரிதலை விட தங்களின் மார்க்கப் புரிதல் மிகச் சரியானது என்கிறார்கள்//
பதில்
இவர் சுட்டிக்காட்டிய வசனத்தின் இறுதியே இவர் கருத்துக்கு எதிராகத்தான் இருக்கிறது. இதுதான் அந்த வசனம்
“மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.”
நபியும் குர்ஆனை விளக்குவார், நாமும் குர்ஆனை சிந்திக்க வேண்டும் என்ற இரண்டு விடையங்களையும் சேர்த்து அல்லாஹ் சொல்கிறான்.
இனி நபி இல்லை என்பதால் அல்குர்ஆன் என்பது எக்காலத்துக்கும் பொருத்தமானதே. நபிகள் விளக்கியது தவிர நவீன காலப் பிரச்சினைகளுக்கும் குர்ஆன் தீர்வு சொல்லும். அதை நாம்தான் விளங்க வேண்டும். நபிகளார் விளக்காத விளக்கங்களும் குர்ஆனில் இருக்கும் என்பதையே இந்த வசனம் சொல்கிறது.
மேலும் நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி பேருரையில் சொன்னது என்ன?
“செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம் (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)”
நபிகள் சொன்னதில் சகாபாக்களின் விளக்கத்தில் இல்லாத சிலவும் பின்னர் வரும் மக்களால் விளங்கப்படும் அல்லவா. அப்படி விளங்குவதால் சகாபாக்களின் விளக்கமான ஹதீசுக்கு மேலதிகமான விளக்கமும் ஹதீசில் இருக்கிறது என்பது தானே அர்த்தம்.
ஹதீசில் உள்ள ஒரு அம்சத்தை நாங்கள் சொன்னால் இதற்கு முன் இதை எந்த சலபி அறிஞர் சொன்னார் என்று கேட்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. அதிலிருந்து என்ன தெரிகிறது? சகாபாக்கள் விளங்காத ஒன்றை சலபி அறிஞர்கள் அந்த ஹதீசில் இருந்து விளங்கியிருப்பார்கள் என்று தானே அதன் அர்த்தம்.
சகாபிகள் பேரில் எந்த மதுகபும் இல்லை. இமாம்கள் பேரில்தான் இருக்கிறது. சகாபி விளங்காத ஒன்றை இமாம் விளங்கியிருப்பார் என்பதுதானே அதன் அர்த்தம்.
எந்த மனிதனுக்கும் குர்ஆனின் கருத்தோடு மோதாமல் மேலதிகமாக குர்ஆனை விளங்க உரிமை உண்டு. அவர் விளங்கியது சரியா பிழையா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். அந்த விளக்கம் தவறாக இருந்தாலும் விளங்கும் உரிமையைப் பறிக்க முடியாது.
மேலும் இந்த வசனத்தை ஆதாரம் காட்ட நாம்தான் அதிக உரிமை படைத்தவர்கள். குர்ஆனுக்கு விளக்கமாகவே நபி சொல்வார்கள் என்று குர்ஆன் சொல்ல நபிகளாருக்கு பல காலம் பைத்தியம் இருந்தது என்று குர்ஆனுக்கு மாற்றமாக நபிகள் சொன்னார்கள் என்பதை நம்பும் நீங்கள்தான் இந்த வசனத்துக்கு மாற்றமாக நடக்கிறீர்கள்.
ஸலபிச் சிந்தனை உடையவர்கள் single layer இல் சிந்திக்காமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து தமது மார்க்கப் பணிகளை செய்ய வேண்டும். நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதால் வழமையான எனது எழுத்து நடையை மாற்றி உங்கள் கோபத்தைத் தூண்டாமல் புரியவைத்துள்ளேன்.
-- Roohul Razmi
share this... https://bit.ly/452kbDG