தவ்ஹீத் ஜமாஅத் video's: மீலாதும் மவ்லிதும்
Showing posts with label மீலாதும் மவ்லிதும். Show all posts
Showing posts with label மீலாதும் மவ்லிதும். Show all posts

கந்தூரி உணவு ஹராமானதா?

 கந்தூரி உணவு ஹராமானதா?

உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக (108:02)-முன்திர்

மரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர்.

முதலில் கந்தூரி என்ற வார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல.


இஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது.
அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை.

நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா

  நபியின் சளியை உடம்பில் பூசிக் கொண்டார்களா?

பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

"அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற
அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள்."   புஹாரி 2731 & 2732

அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா

 அல்லாஹ்வின் ஒளியால் நபிகளார் படைக்கப்பட்டார்களா?


(أول ما خلق الله نور نبيك يا جابر - الحديث) رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد الله بلفظ قال قلت : يا رسول الله ، بأبي أنت وأمي ، أخبرني عن أول شئ خلقه الله قبل الأشياء . قال : يا جابر ، إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره ، فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ، ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي ، فلما أراد الله أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء ، فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ، ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ، ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهى المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله - الحديث- كشف الخفاء - (1 / 265)

அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு



அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள்,வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான். முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்) நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265


இந்தச் செய்தி பரவலாக நபிகளாரின் சிறப்பு என்ற பெயரில் இமாம்களின் சொற்பொழிவில் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். குறிப்பாக மீலாது மேடைகளில் பேசுபவர்கள் இறைவனின் ஒளியைக் கொண்டே நபிகளார் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களே முதல் படைப்பு என்றும் மேற்கூறிய செய்தியை அடிப்படையாக வைத்து நீட்டி முழங்கிவருகின்றனர்.

ஆமினா கண்ட அற்புத ஒளி

 ஆமினா கண்ட அற்புத ஒளி.

"ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா ஸர்மதா'' என்று கவிதை வரி


துவங்குவதற்கு முன்னால் ஓர் உரை, மவ்லிது கிதாபில் இடம் பெறுகின்றது.

அவரது அழகு வடிவெடுக்கும் நேரம் நெருங்கி - அவரது பூரண ஒளி பட்டு உலகம் பிரகாசிக்கவிருக்கும் வேளையில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாரெங்கும் பரவியது. அன்னை ஆமினாவுக்கு ஓர் ஒளிக் கற்றை தோன்றியது. அதில் சிரியா, புஸ்ரா கோட்டை தெரிந்தது. கிஸ்ரா அரசவை மண்டபம் உடைந்து ஆடியது. சாவா என்ற ஏரி வற்றியது. பாரசீகர் தன் பற்றுதலுடன் வணங்கும் தெய்வமான பற்றி எரியும் நெருப்பு நூர்ந்து போனது. கடுகடுத்த அதன் புஜ பல பராக்கிரமசாலிகள் பணிந்து விட்டனர். அவர்களது பிறப்பு கண்டு பயந்து நடுங்கி சிலைகள் தலை கீழாகக் குப்புறக் கவிழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கத்தின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டன. மகிழ்ச்சியும், மலர்ச்சியும் பரவியது. எட்டு திக்குகளிலும் தேர்வு செய்யப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளி பட்டு மின்னின.

இவ்வாறு ஒரு நீண்ட வர்ணனையை இந்த மவ்லிது வரிகள் தாங்கி நிற்கின்றன.

நபியை படைக்காவிட்டால் உலகமே இல்லையா ?

 நபியை படைக்காவிட்டால் 🌍 உலகமே இல்லையா


📌முஹம்மதே நீ மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகத்தை நான்
படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி இப்னு அசாகீர் என்ற நூலில் இடம்பெற்றிருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தும்! மௌலீது குப்பைகள்!!!

  மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்'என்பதாகும்.

ஆதாரம்:  சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்,

ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான,அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.

மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ,அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?' என்று திட்டவட்டமாக தெரியவில்லை.

(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

 இஸ்லாத்தின் பார்வையில் மீலாது

தமது பிறந்த நாட்களையும், தமக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாட்களையும், தமது தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடி விழா எடுக்கும் வழக்கம் அதிகமான மக்களிடம் காணப்படுகிறது.

இதைப் பின்பற்றி முஸ்லிம்களும் இது போன்ற விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். தங்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை மீலாது எனும் பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

மற்றவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவது ஒரு விழாவாக மட்டும் அமைந்துள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக பிறந்த நாள் கொண்டாடுவது இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் ஒரு வணக்கமாக புனிதமான செயலாக கருதப்படுகிறது.

மீலாது விழா

மீலாது விழா

ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரை கல்லாக அவன் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அவன் செய்யும் செயலுக்கு நன்மை பரிசாகக் கிடைக்கும். இல்லையேல், அது தீமையாகவே அமைந்துவிடும்.

இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களின் வரலாற்றைச் சொல்லிக்காட்டும் போது யாருடய பிறந்த நாளைப் பற்றியும் கூறவேயில்லை.  அதைப் போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்றாஹீம்(அலை) மற்றும் பல நபிமார்களின் வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப் பற்றியும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை. அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.

மீலாதும் மவ்லிதும்

 மீலாதும் மவ்லிதும்

இஸ்லாம்  என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல் குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.  நூல்: அஹ்மத் (16519)


இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.

ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். சில பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

Search This Blog