கந்தூரி உணவு ஹராமானதா?
உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக (108:02)-முன்திர்
மரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர்.
முதலில் கந்தூரி என்ற வார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல.
இஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது.
அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை.






