தவ்ஹீத் ஜமாஅத் video's: மவ்லிது
Showing posts with label மவ்லிது. Show all posts
Showing posts with label மவ்லிது. Show all posts

ஆமினா கண்ட அற்புத ஒளி

 ஆமினா கண்ட அற்புத ஒளி.

"ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா ஸர்மதா'' என்று கவிதை வரி


துவங்குவதற்கு முன்னால் ஓர் உரை, மவ்லிது கிதாபில் இடம் பெறுகின்றது.

அவரது அழகு வடிவெடுக்கும் நேரம் நெருங்கி - அவரது பூரண ஒளி பட்டு உலகம் பிரகாசிக்கவிருக்கும் வேளையில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் பாரெங்கும் பரவியது. அன்னை ஆமினாவுக்கு ஓர் ஒளிக் கற்றை தோன்றியது. அதில் சிரியா, புஸ்ரா கோட்டை தெரிந்தது. கிஸ்ரா அரசவை மண்டபம் உடைந்து ஆடியது. சாவா என்ற ஏரி வற்றியது. பாரசீகர் தன் பற்றுதலுடன் வணங்கும் தெய்வமான பற்றி எரியும் நெருப்பு நூர்ந்து போனது. கடுகடுத்த அதன் புஜ பல பராக்கிரமசாலிகள் பணிந்து விட்டனர். அவர்களது பிறப்பு கண்டு பயந்து நடுங்கி சிலைகள் தலை கீழாகக் குப்புறக் கவிழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கத்தின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டன. மகிழ்ச்சியும், மலர்ச்சியும் பரவியது. எட்டு திக்குகளிலும் தேர்வு செய்யப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளி பட்டு மின்னின.

இவ்வாறு ஒரு நீண்ட வர்ணனையை இந்த மவ்லிது வரிகள் தாங்கி நிற்கின்றன.

நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தும்! மௌலீது குப்பைகள்!!!

  மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்'என்பதாகும்.

ஆதாரம்:  சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்,

ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான,அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.

மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ,அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?' என்று திட்டவட்டமாக தெரியவில்லை.

(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

நரகத்தைத் தரும் மவ்லிது

 நரகத்தைத் தரும் மவ்லிது

தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள்.

ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் பள்ளிவாசலுக்குச் செல்லாதவர்கள் ரபீயுல் அவ்வல் மாதத்தில் மவ்லிது என்னும் அரபிப் பாடலைக் கேட்பதற்காகவும், அதைத் தொடர்ந்து வழங்கப்படும் நேர்ச்சையை வாங்குவதற்காகவும் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள். அந்த அளவுக்கு மவ்லிது என்பது இவர்களிடம் மிகப் பெரும் வணக்கமாகக் கருதப்படுகின்றது.

எந்த ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்; அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணக்கத்தைச் செய்து காட்டியோ, அல்லது சொல்லியோ இருக்க வேண்டும். அல்லது நபித்தோழர்கள் செய்த செயலை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்தச் செயல் அவனிடமிருந்து ஏற்கப்படாது. அந்த வணக்கத்தால் மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக தீமை தான் கிடைக்கும்.

நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

 நபிகள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல் மவ்லிதுக்கு ஆதாரமா?

நூர்ஜகான்

பதில்


மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை நடையிலும் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதில் மகிழ்ச்சி அடைந்த மதீனா மக்கள் அவர்களை வரவேற்று பாடினார்கள்.

இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம் காலத்தில் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது ஊருக்கு அவர்கள் வந்தால் அவர்களை வரவேற்று நாம் பாடலாம்.

Search This Blog