தவ்ஹீத் ஜமாஅத் video's: வரலாறு
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும்

 

கஅபாவும் பிற பள்ளிகளும் ஒன்றா?


கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும்


என்று சிலர் கேட்கலாம். ஆனால் இதில் இருக்கிற மிகப்பெரும் அறிவியல் உண்மையை ஆராய்ந்தால் இந்த வசனங்களெல்லாம் இறைவேதம் என்பதற்கான சான்றாக நிச்சயம் இருக்கும்.

بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ -
சூடேற்றப்பட்ட கற்களைப் பறவைகள் வீசியதாக அல்லாஹ் கூறுகிறான். வெப்பம் ஊட்டப்பட்ட கற்கள் என்கிறான். சிஜ்ஜீல் என்றால் கடும் வெப்பம் என்று பொருள். கடும் வெப்பம் என்றால் அணு ஆயுதத்தைதான் குறிக்கும். அது வெடித்தால் ஏற்படும் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும். அதனால்தான் அணுகுண்டின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அழிந்து நாசமாகிவிடுகிறார்கள். கருகி சாம்பலாகி விடுகிறார்கள்.

அன்றும் இன்றும் கொள்கையில் தடம்புரளாதவர் சகோ பிஜே

பிஜே
 தஞ்சை தமுமுக மாநாட்டில் சகோ பிஜே அவர்கள் கடைசியாக
சத்திய பிரமாணம் செய்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு இந்த இயக்கம் ஒருநாளும் வோட்டு அரசியலுக்கு செல்லாது என்று கூறியபோது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் முதல் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு வழிமொழிந்தார்கள் வேறுவழியின்றி. 

ஆனால் அந்த கூட்டம் தங்களுக்காக வந்தது என்று தவறாக புரிந்துகொண்ட பேராசிரியர் இந்த ஆளை (PJ) கழட்டிவிட்டால்தான் இந்த கூட்டத்தை காட்டி அரசியல் நடத்தலாம் என்று எண்ணி தமுமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தவ்ஹீத் காரர்கள் என்ற தவறான கருத்தை வெளியிட்டார் அப்போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் தமீமுன் அன்சாரி ஹைதரலி போன்றவர்கள். 

அவர்களின் அரசியல் ஆசைகளை தெரிந்துகொண்ட சகோ பிஜே அவர்கள் அதிலிருந்து விலகினார். 

சகோ பிஜே அவர்கள் தமுமுகாவை உருவாக்கி அதை ஒரு பிரமாண்ட 

சக்தியாக ஆக்கிக்காட்டி கலைஞரையே மிரளவைத்தவர் சகோ பிஜே அவர்கள். 

ஆது சமுதாயமும் நபி ஹுத் (அலை) அவர்களின் வரலாறும் அறிந்து கொள்ளுவோம்

 இஸ்லாத்தில் ஆது சமுதாயமும் & நபி ஹுத் (அலை) அவர்களின் வரலாறும் அறிந்து கொள்ளுவோம் 💞 

• அல்லாஹ் தனது வேதம் அல்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாற்றை நமது படிப்பினைக்காக கூறி உள்ளான்! ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் வரலாற்றை அறிந்து வைத்து இருப்பது அவசியமாகும்!

இறைத்தூதர்களான அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது! 

(அல் குர்ஆன் : 12 : 111)

நபி நூஹ் (அலை) அவர்களுக்கு பிறகு அல்குர்ஆன் கூறும் இறைத்தூதர் ஹூத் (அலை) ஆவார்கள்! இவர்களின் சமுதாய மக்கள் தான் ‘ ஆத் ’ சமுதாயம் ஆவார்கள்!

(அல்குர்ஆன் : 7 : 69)

• அல்குர்ஆனில் கூறப்பட்டு உள்ள 25 நபி மார்க்களில் நபி ஹுத் (அலை) அவர்களும் ஒருவர் ஆவார்கள்!

• அல்குர்ஆனில் உள்ள 114 சூராவில் சூரத்துல் ஹுத் - 11 என்ற ஒரு சூராவும் உண்டு!

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

கிப்லா
 39. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை - திசையை - முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தத் திசை மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றி 2:142-145 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

சுமார் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அது மாற்றப்பட்டு கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது இதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

இவ்வசனம் நேரடியாகச் சொல்லும் செய்தி இது தான்.

ஆனாலும் திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூல ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இஸ்லாத்தின் மூல ஆதாரமாகும் என்ற கொள்கை விளக்கமும் இந்தச் செய்தியில் உள்ளடங்கியுள்ளது. அது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

அல்லாஹ் போட்ட அணு குண்டு

அல்லாஹ் போட்ட அணு குண்டு

திருமறைக் குர்ஆனில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களைத் தேர்வு செய்து, இப்பகுதியில் விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளோம்.

  அந்த வகையில், தற்போது உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் அணு குண்டு பற்றிய இஸ்லாமியப் பார்வை என்ன?  என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.  ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதாக நாடகமாடி, அந்நாட்டை அமெரிக்கா அநியாயமாக ஆக்கிரமித்தது.  அங்கு நிகழ்த்தப் பட்ட அக்கிரமத்தின் ரணங்கள் ஆற முன்னரே ஈரானில் அணுசக்தி உள்ளதாக இப்போது அந்நாட்டைக் குறிவைத்துள்ளது.

 இரசாயண ஆயுதப் போர்வைக்குள் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் குறிவைக்கப்பட்டு வரும் இவ்வேளை, அணு சக்தி பற்றி அல் குர்ஆன் கூறுவது என்னவென்பதை,  அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் எளிய நடையில் 105வது அத்தியாயத்திற்கு, சமகால இஸ்லாமிய அறிஞர் பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் விளக்குகின்றார்கள்.  அவ்விளக்கத்தை காலத்தின் தேவை கருதி வெளியிடுகின்றோம்.
'யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர் சிந்திக்க வில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையா?  அபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையா?  அப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன.  அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.''                  (சூறா அல்பீல் : 1-5)

Search This Blog