தவ்ஹீத் ஜமாஅத் video's: சூனியம்
Showing posts with label சூனியம். Show all posts
Showing posts with label சூனியம். Show all posts

ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?

 ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாக ஆகும்?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் சூனியம் இருக்கிறது என்பதை நிலைநாட்ட ஒரு கேள்வியை எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிந்திக்கும் திறன் சிறிதளவும் இருப்பவர்களால் இது போல் கேட்க முடியாது. அந்தக் கேள்வி இதுதான்.

சூனியம் பெரும்பாவங்களின் ஒன்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூனியம் இறைமறுப்பில் தள்ளி விடும் என்று நீங்களும் சொல்கிறீர்கள். சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை என்று சொன்னால் ஒன்றுமே இல்லாததை எப்படி பாவம் என்றும் இறைமறுப்பு என்றும் சொல்ல முடியும் என்பது தான் அந்தக் கேள்வி.

சூனியம் இல்லை என்று நாம் சொல்வதை இவர்கள் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்கள்.

முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?

 முன்னர் சொன்னதை மாற்றிச் சொல்வது ஏன்?

சூனியத்தின் மூலம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது; அதிகபட்சமாக கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்த முடியும் என்று முன்னர் நாம் கூறினோம். எழுதினோம். இப்போது கணவன் மனைவிக்கு மத்தியில் சூனியத்தின் மூலம் எந்தப் பிரிவையும் ஏற்படுத்த முடியாது என்று சொல்கிறோம்.

சூனியக் கட்சியினர் இதைத் தான் தங்களின் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

தவ்ஹீதின் அடிப்படையே இதுதான். மனிதன் குறைவான அறிவுள்ளவன். அதனால் அவனிடம் தவறுகள் ஏற்படாமல் இருக்காது. முன்னர் சொன்னதில் சிலவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளாத ஒரு நல்லறிஞர் கூட வரலாற்றில் இல்லை. தவறு என்று தெரிய வரும் போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

 மேஜிக் செய்வது இணைகற்பித்தலா?

அடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது.

சூனியம் என்றால் மேஜிக் என்று சொல்கிறீர்கள். சூனியம் இணைவைப்பு என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் மேஜிக் கற்றுக் கொள்வதும் மேஜிக் பார்ப்பதும் இணைவைத்தல் ஆகுமா?

இந்தக் கேள்வியும் பரவலாகக் கேட்கப்படுகின்றது.

வெளித் தோற்றத்தில் இரண்டு காரியங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் பின்னால் உள்ள நம்பிக்கையைப் பொருத்து இரண்டும் வேறு வேறு ஆகிவிடும்.

ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொள்வோம். இதைத் தாலியாகவும் அணிகிறார்கள். வெறும் நகையாகவும் அணிகின்றனர். தோற்றத்தில் அது தங்கச் செயின் தான். ஆனால் நம்பிக்கையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.


  நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன?.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்.



    3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த


அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

    புகாரி 3268

நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஒரு பகுதி விளக்கம்

 நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஒரு பகுதி விளக்கம்

இந்த ஹதீசை மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரங்களில் மிகப் பிரதான ஒன்று அதில் நபிகளாருக்கு மன நோய் உள்ளதாக இருப்பதாகும்.

இந்த ஹதீசை மறுக்கத் தேவையில்லை என்று சொல்பவர்கள் இதற்குச் சொல்லும் பதில் இந்ந ஹதீசில் நபிகளாருக்கு மன நோய் என்று வரவில்லை
என்பதாகும்.

இதில் இருந்து இருதரப்பாரும் ஒத்துக் கொள்ளும் ஓர் அம்சம் நபிகளாருக்கு மன நோய் அல்லது பைத்தியம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது இருக்கவும் கூடாது என்பதே.

ஏன் என்றால் நபிக்கு பைத்தியத்தின் ஓர் அம்சம் கூட இருக்காது என்று குர்ஆன் திட்டவட்டமாக சொல்வதால் ஆகும்.

சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாதா?

 சூனியத்தை நம்பினால் சொர்க்கம் செல்ல முடியாதா?


சூனியத்தால் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்பதை ஆதாரங்களுடன்
பார்த்து வருகிறோம்.

இன்னொரு நபிமொழியும் சூனியத்தை நம்பக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. அது பற்றிய விபரத்தைப் பார்ப்போம்.

.مسند أحمد - (ج 45 / ص 477) 26212 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

"விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்."
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
நூல் : அஹ்மது (26212)


சூனியத்தை ஒருவன் நம்பினால் அவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்பதைத் தெளிவான முறையில் இந்த நபிமொழி சொல்கிறது. எந்த வியாக்கியானமும் கொடுக்க முடியாத வகையில் இதன் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா

 சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா


குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) நூல்: முஸ்லிம் (1470)

இந்தச் செய்தி தொடர்பாக தற்போது முகநூலில் பித்னா பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியில் சூனியக்காரர்களுக்கு சக்தி இருப்பதாகவும், அது பகரா ஓதுவதன் மூலம் அற்றுப் போவதாகவும் வந்துள்ளது.

மேலும் முஸ்லிம் நூலின் தமிழாக்கத்தில் இந்த வாசகம் ஒரு அறிவிப்பாளரிடமிருந்து வரவில்லை என்பது போன்றும் ஒரு தகவல் பதியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியின் உண்மை நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்

புகாரி முஸ்லிம் நூல்களை மேற்கோள் காட்டும் போது ஏற்கனவே தமிழில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புகளில் இருந்துதான் ந்மது கட்டுரையாளர்கள் எடுத்துக் காட்டுவார்கள். அந்த அடிப்படையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில் உள்ளதை கட்டுரையாளர் அப்படியே எடுத்து எழுதியதால் நீங்கள் சுட்டிக் காட்டுவது போன்ற கருத்து ஏற்படுகின்றது.

மேலும் தமிழில் வெளியிடப்பட்ட அந்த ஹதீஸை முழுமையாக வெளியிட்டு இருந்தால் இந்தச் சந்தேகத்தை நீக்கும் சொற்கள் அதில் இடம்பெற்றுள்ளதை மக்கள் அறிந்து கொள்வார்கள். கட்டுரையாளரும் அதைக் கவனிக்கவில்லை. நாமும் கவனிக்கவில்லை.

அந்த ஹதீஸின் அரபுமூலம் இதுதான்

صحيح مسلم (2/ 197)1910 – حدثنى الحسن بن على الحلوانى حدثنا أبو توبة – وهو الربيع بن نافع – حدثنا معاوية – يعنى ابن سلام – عن زيد أنه سمع أبا سلام يقول حدثنى أبو أمامة الباهلى قال سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول « اقرءوا القرآن فإنه يأتى يوم القيامة شفيعا لأصحابه اقرءوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرءوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة ». قال معاوية بلغنى أن البطلة السحرة.

صحيح مسلم (2/ 197)1911 – وحدثنا عبد الله بن عبد الرحمن الدارمى أخبرنا يحيى – يعنى ابن حسان – حدثنا معاوية بهذا الإسناد. مثله غير أنه قال « وكأنهما ». فى كليهما ولم يذكر قول معاوية بلغنى.

எனவே மற்றவர்களால் வெளியிடப்பட்ட இதன் தமிழாக்கத்தை முதலில் பாருங்கள்

1470 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “அல் பத்தலா‘ எனும் சொல்லுக்கு “சூனியக்காரர்கள்‘ என்று பொருள் என எனக்குத் தகவல் கிட்டியது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் (அவை மேகங்களைப் போன்று அல்லது பறவைக் கூட்டங்களைப் போன்று என்பதற்கு பதிலாக) “அவை மேகங்களைப் போன்றும் பறவைக் கூட்டங்களைப் போன்றும் வந்து வாதாடும்’ என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஆவியா பின் சல்லாம் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிட்டியதாகக் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.

சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?


 சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா?


முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு சூனியத்தை மறுக்கும் நம்மை முஃதஸிலாக்கள் என்கிறார்கள்.

முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

 ஜின்களை ஏவி விட்டு சூனியம் செய்யப்படுகிறதா?

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது இணை வைப்பாக இருக்கிறது என்று நாம் கூறும் போது அதை மறுப்பதற்காக இன்னொரு வாதத்தை எடுத்து வைத்துச் சமாளிக்கிறார்கள்.

சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம் செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப் போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்.

சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புகமாட்டான் - என்ற செய்தி பலவீனமானதா?

  நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 30

சூனியம் தொடர்பாக இடம் பெரும் செய்திகளில் எதிர் தரப்பினரின்
போலி வாதங்களுக்கு பதிலாக அமைந்த தெளிவான ஒரு செய்தி தான் சூனியத்தை உண்மைப் படுத்தியவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற கருத்துப்பட பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாகும். 

குறித்த செய்தி தமது சூனியக் கருத்துக்கு பலத்த அடியாக அமைந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்ட சூனியக் கூட்டத்தினர் தற்போது குறித்த செய்தியையும் பலவீனம் என்று தட்டிக் கழித்து தப்பித்து விட முயற்சி செய்கின்றனர். 

சூனியத்தை உண்மைப் படுத்துபவன் தொடர்பான செய்தியின் அறிவிப்பாளர் தொடர் தொடர்பில் தற்போது அலசுவோம்.

நபிகளாருக்கு சூனியம் - ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?

சூனியம்
 நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 29

நபிகள் நாயத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும்இ அதனால் நபியவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டதாகவும் புகாரி உள்ளிட்ட சில  நூல்களில் பதிவாகியிருக்கும் செய்திகளை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் நாம் மறுக்கிறோம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 

தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றெல்லாம்  அந்தச் செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் தான் செய்யாததைச் செய்ததாகச் கருதிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல்இ சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?

சூனியம்
 நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 28

அல்குர்ஆனுக்கு முரண்படுகின்ற செய்திகளில் மிக முக்கிய இடத்திலிருப்பது சூனியம் பற்றிய செய்திகளாகும். மற்ற செய்திகளை விட இவற்றை நம்புவதே மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சூனியத்தை உண்மையென்று நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும் என்று திருமறைக் குர்ஆனும், நபியவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். 

அந்த அடிப்படையில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்ற கருத்துப்பட புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இஸ்லாத்தின் பல அடிப்படைகளைத் தகர்க்கின்றது. அதை அறிவதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்.

சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா?

முஃதஸிலா
 சூனியத்தை மறுப்பவர் முஃதஸிலாவாக ஆவாரா?


முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் இதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு சூனியத்தை மறுக்கும் நம்மை முஃதஸிலாக்கள் என்கிறார்கள்.

முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்

சூனியம்
 28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்  

இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான்.

இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள் என்ற வாக்கியம் சொல்வது என்ன?

சூனியம் என்பது நல்லவர்களால் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதைக் கற்றுக் கொடுத்தவர்கள் ஸுலைமான் நபி காலத்தில் வாழ்ந்த தீயவர்கள் தான். இது தான் மேலே உள்ள வாசகத்தின் கருத்து.

ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை என்ற வாக்கியம் சொல்வது என்ன?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

 19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?   

மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன.

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக 'தூர்' மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைச் சிற்பத்தை உருவாக்கினான்.

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. "இதுதான் கடவுள்; மூஸா வழிமாறிச் சென்று விட்டார்'' எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான் என 20:96 வசனம் கூறுகிறது.

அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களின் சிந்தனையில் நுழையவில்லை. மூஸா நபி அவர்கள் அந்தச் சிற்பத்தைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள் என்பதை 20:89, 20:97 ஆகிய வசனங்களில் காணலாம்.

தர்கா, சூனியம் உள்ளிட்ட இணை வைப்பை நம்பும் பெண்ணுடன் வாழலாமா?

  தர்கா, சூனியம் உள்ளிட்ட இணை வைப்பை நம்பும் பெண்ணுடன் வாழலாமா?

முஸ்லிமாக இருந்து கொண்டே இணை கற்பித்தால் அல்லாஹ்விடம்


அவர்கள் இணை கற்பிப்பவர்களாகவே கருதப்படுவார்கள். திருந்திக் கொள்ளாமல் மரணித்து விட்டால் அவர்கள் நிரந்தர நரகத்தை அடைவார்கள்.

இதில் எந்த சமரசமும் இஸ்லாமில் இல்லை.

இணை கற்பிக்கும் பெண்களையும், ஆண்களையும் மணக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளது.

 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221)2

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப் படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

ஸிஹ்ர் ஓர் ஆய்வு- தொடர் 1

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

அல் குர்ஆனும் சுன்னாவும் முரண்படுமா என்று “ஞான சூனியங்கள் ” அண்மைக் காலமாக கேள்வி எழுப்பி வருகின்றன. அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது. அதற்கு விளக்கவுரையாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன.

எனவே அல்குர்ஆனுக்கு முரணாக உள்ளவைகள் ஹதீஸ்களாக இருக்க முடியாது. ஹதீஸ்கள் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக் கதைகளும் இடைச் செறுகள் செய்யப்பட்டன. அந்த தொடரில் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் பைத்தியமாக இருந்ததாக சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் புகுத்தப் பட்டுள்ளன.

சிந்திக்காத சிந்தனைத் திரணற்ற சிலர் நபியையும் கேவலப்படுத்தி வருகின்றர். எனவே இது தொடர்பான தெளிவை வளங்குவதற்காக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

ஸிஹ்ர் ஓர் ஆய்வு- தொடர் 1

5- ஹாரூத் மாரூத் மலக்கா? தொடர் : 05 ஃபலக் விரிவுரை

 ஹாரூத் மாரூத் மலக்கா?


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் : 05

நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம்.

இதன் தொடர்ச்சியாக, சூனியம் சம்பந்தமாக திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் 102 வது வசனம் தெளிவாகப் பேசுகிறது.

இன்று நம் காலத்தில் வாழ்கிற பெயர் தாங்கி ஆலலிம்கள் நாங்கள் ஜின்களை அடக்கிவைத்திருக்கிறோம் என்றும் எங்களுக்கு மாயமந்திரம் தெரியும், பில்லிலிசூனியம் தெரியும் என்றும் கூறி மக்களைப் பயங்காட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது போல் நபிகள் நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் அன்றைய மக்களிடத்தில், எங்களை ஏதாவது செய்தீர்களென்றால் நாங்கள் சூனியம் செய்து உங்களை வீழ்த்திவிடுவோம் என்று சொல்லிலி மாயமந்திரங்களாலும் பில்லிலிசூனியத்தினாலும் அச்சுறுத்தி வந்தனர்.

4-நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா? தொடர் : 4

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதா?

ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை
தொடர் : 4

  சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள் : "சூனியம் என்பது கற்பனை அல்ல; மெய்யான அதிசயமே. அதன் மூலம் ஒரு மனிதனின் கை கால்களை முடக்கலாம். படுத்த படுக்கையில் தள்ளலாம். பைத்தியமாக ஆக்கலாம்'' என்றெல்லாம் பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தமது கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு நபிமொழித் தொகுப்புக்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ்களைத் தங்களின் கருத்தை நிரூபிக்கும் முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அந்த ஹதீஸ்கள் வருமாறு:

3- ஸிஹ்ர் என்றால் என்ன? தொடர் :3 (ஃபலக் விரிவுரை )

 ஸிஹ்ர் என்றால் என்ன?


ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை


மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது.

 "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலி ன் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டுவந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 5:110)

Search This Blog