தவ்ஹீத் ஜமாஅத் video's: பைஅத்
Showing posts with label பைஅத். Show all posts
Showing posts with label பைஅத். Show all posts

அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

 அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

ஆக்கம் பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் 88

விலை ரூபாய் 20.00

    அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம்
    அமீர் என்றால் யார்
    ஒரு நாட்டில் பல அமீர்கள் இருக்க முடியுமா
    அதிகாரமில்லாதவர் அமீர் என்று அழைக்கப்படலாமா
    இந்திய முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக மூஸ்லிம்களுக்கு அமீர் யார்
    தலமைப் பதவியின் வகைகள்
    இயக்கங்களின் தலைவர்கள் அமீர்கள் அல்லர்
    இந்தியாவில் யாரும் அமீர்கள் அல்லர்


என்பன போன்ற விஷயங்கள் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.


அறிமுகம்

இஸ்லாத்தின் பெயரால் உலகில் ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இந்த


இயக்கங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவையாக இருந்த போதும் அந்த இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அந்த இயக்கங்களில் இருந்து விடுபடுவதற்கும், விலகுவதற்கும் தயங்குகின்றனர்.

உமரலியுடன் விவாதம்1993

 உமரலியுடன் விவாதம்1993


    மயக்கம் தெளிந்தது

  கடந்த சில ஆண்டுகளாக எமது நாட்டில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் தேக்கம் ஏற்படும் அளவுக்கு எம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எம்மிடையே ஒரு தாயியாக இருந்த உமரலியாரும் சிலரும் நாங்கள் சிலருமாகப் பிரிந்து இயங்கும் நிலை ஏற்பட்டது. எங்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்பட குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் முயற்சிகள் செய்யப்பட்டதும் உண்டு. அதன் தொடர்பாகப் பலமுறை இருதரப்பும் சந்தித்துக் கதைத்துக் கொண்டதும் உண்டு.

 உமர் அலியார் சில ஆண்டுகளுக்கு முன் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு ஜமாஅத்தை ஸ்தாபிதம் செய்து கொண்டு, அதற்குத் தம்மையே அமீராகவும் அறிவித்துக் கொண்டார். தம்மிடம் பைஅத் செய்து முஸ்லிம் ஜமாஅத்தில் இணையாதவர்கள் காஃபிர்கள் என்று சொன்னார்.

 யார் பைஅத் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுகிறார் என்ற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு, தமது ஜமாஅத்தைச் சேராதவர்கள் அனைவரையும் - மொத்த உலக முஸ்லிம்களையுமே - காபிர்கள் என்றார். ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் பற்றிப் பிடித்துக் கொள் என்று வருகின்ற ஹதீஸையும் உமரலியார் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

பைஅத் செய்யாதவன் முஸ்லிம் இல்லையா ?

   ஜமாஅதுல் முஸ்லிமீன் இயக்கம் ஓர் விளக்கம்

அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவையும் மட்டும் அடிப்டையாகக் கொண்டுள்ள தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகேடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது எதுவெனில் குறிப்பிட்ட ஓர் அல்குர்ஆன் வசனத்தை, ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தை விளங்கி ஏனைய ஹதீஸ்களையும் அல்குர்ஆன் வசனங்களையும் முறையாக விளங்காமல் அவற்றை அக்கருத்துக்குக் கிளைகளாக ஆக்கி விளங்க முற்பட்டமைதான் என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆராயும் போது அறியமுடிகின்றது. அமீருக்கு பைஅத் செய்வதே இஸ்லாத்தின் அடிப்படை பைஅத் செய்யாதவன் முஸ்லிம் அல்ல என்ற வழிகெட்ட கொள்கையும் இந்த அடிப்படையிலேயே தோற்றம் பெற்றது .

Search This Blog