தவ்ஹீத் ஜமாஅத் video's: திருமணம்
Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

 உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?


கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம்.
பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?

உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  நஜ்ஜாஷி மன்னர் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவர் திருமண விருந்து அளித்தார். பெண்ணின் பொறுப்பாளராக இருந்த நஜ்ஜாஷி திருமண விருந்து கொடுத்துள்ளதால் பெண் வீட்டின் சார்பில் திருமண விருந்து கொடுக்கலாம் என்று ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஒருவர் வாதிடுகிறார். இது சரியா?

சேக் செய்யது.

பதில் :

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும்.

ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து திருமணத்தைக் காரணமாக வைத்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

இதே போன்று திருமண வலீமா விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை.

ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?

 ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?

இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான TNTJ, SLTJ யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார்.

திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த ஹதீஸ் பலவீனமானது.

(2) ரசூல் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது யார் யாரையெல்லாம் காண்கிறீர்களோ அவர்கள் எல்லோரையும் அழைக்கும்படியும் அத்திருமணத்தில் முன்னூறு பேரளவில் கலந்து கொண்டதாகவும் புகாரியில் செய்தி உள்ளது என்று தெரிவித்தார். முன்னூறு பேருக்கு விருந்து கொடுப்பதென்பது அன்றைய காலத்தில் ஒரு பெரிய செலவு செய்ய வேண்டிய விருந்து என்கிறார்.

திருமண விருந்தின் அளவு என்ன?

 திருமண விருந்து

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன? திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை பார்ப்போம்.  

திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே?

 திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே?

சிறிய வயதுப் பெண்களையும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதையும் இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது.

சிறுவயதுப் பெண்ணைத் திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

13 - விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்

 விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். 

விவாகரத்தானவர்கள் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும். ஆண் பெண் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளை பார்வையிடு வது போன்ற மார்க்க சட்டங்கள் திருமன சட்டத்தில் காண முடியவில்லை. அவற்றை இணைக்க வேண்டும். தற்போது இலங்கையில் பிள்ளைகளின் பாதுகாப்புரிமை காதி நீதிமன்றங்களில் அல்லாமல் மாவட்ட நீதிமன்றங்களினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தை குடும்ப நீதுிமன்றங்களாக மாற்றப்பட்ட காதி நீதிமன்றங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் தோழன், 

ஆர். அப்துர் ராஸிக் B.Com (Special), HND in Law (EDHat), LLB UK (Hons) Reading

வட்ஸ் அப் எண்:

0778-747377

முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும். கைகூலி முறை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்

 முத்தலாக் முறை அவசியம் நீக்கப்பட வேண்டும்.

தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறைசமமாக காணப்பட வேண்டும். 

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் விவாகரத்து முறையில் தற்போதுள்ள முத்தலாக் முறைமாற்றம் செய்யப்பட வேண்டும்.

7,8 -முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?

 முஸ்லிம்களின் திருமண வயதெல்லை எப்படி அமைய வேண்டும்?

சட்டத்தின் பிரிவு 23ல் திருமண வயது குறித்து சில விவரங்கள் பேசப்படுகிறது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பிரிவு 23ல் 12 வயதிற்கு குறைந்த பெண்களின் திருமணத்திற்கு காதியினால் அனுமதிக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, 12 வயதுக்கு மேலுள்ள முஸ்லிம் பெண்களை  முஸ்லிம் ஆண்கள் திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதியளிப்பதுடன் அதற்கு கீழ் வயதில் உள்ள பெண்களை திருமனம் செய்வதாக இருந்தால் காதியின் அனுமதியை பெற்றப்பின் திருமனம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

இந்த சட்டம் சிறுமிகளை வலுகட்டாயமாக திருமனம் செய்து கொள்வதற்கு அனுமதிப்பது போல் தோற்றமளிக்கிறது. 12 வயதுக்கு கீழ் உள்ள முஸ்லிம் பெண்கள் காதியின் அனுமதி பெற்று திருமணம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதன் விளக்கத்தையும் நாம் இங்கே பார்க்க வேண்டும்.

4,5,6- காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் சில அதிகாரிகள் நியகமிக்கப் படுகின்றனர். உதாரணமாக முஸ்லிம் திருமன பதிவாளர், நீதிபதி, காதியார், காதிச்சபை உறுப்பினர்கள் போன்றவைகளை குறிப்பிடலாம். இந்த அனைத்து பொறுப்புகளுக்கும் ஆண்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண பதிவாளர்களும் காதியார்களும் முஸ்லிம் ஆண்களாக இருக்க வேண்டும் என்பதை திருமண சட்டத்தில் 8 மற்றும் 12 வது உறுப்புறை குறிப்பிடுகிறது.

நீதிபதிகளாக பெண்கள் வருவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. காழி என்றால் தீர்ப்பு வழங்குபவர்கள் என்று அர்த்தம். தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கும் அனுமதி உண்டு. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்துள்ளார்கள். மார்க்கத்தின் தீர்ப்பு வழங்கும் கூர்மையான அறிவு கொண்டவர்களாக அவர்கள் கருதப்பட்டார்கள்.

பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக்கப்படல் வேண்டும்.

நீதிபதிகளாக பெண்கள் வரக்கூடாது என்பதற்கான எதிர் வாதங்களும் பதில்களும்

நீதிபதிகளாக பெண்கள் இருக்க்க்கூடாது என்று வாதிடுபவர்கள் கீழ்காணும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.

முதல் வாதம்

‎4073 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً رواه البخاري

“பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி4425, 7099

நமது பதில்

மேலுள்ள ஹதீஸ் ஆட்சி அதிகார பொறுப்பை குறிக்கிறதே தவிர நீதிபதியின் பதவியை குறிக்கவில்லை. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆட்சி மற்றும் நிர்வாக பொறுப்பு என்பது சாதாரனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆட்சி நிர்வாகம் செய்யும்போது அவர்களின் கற்புக்கும் ஒழுக்கத்திற்கும் பல சவால்கள் வந்து விடும்.

இத்தகைய விசயத்தில் மிகப்பெரிய அளவில் மனவலிமை கொண்ட பெண்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள். ஆண்களுக்கே நிர்வாக பொறுப்புகளை சரிவர செய்வதற்கு பல இடையூர்களும் சிரம் சாத்தியங்களும் இருக்கும்போது பெண்களுக்கு அறவே சாத்தியம் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது வாதம்

மற்றுமொரு ஆதாரமாக கீழுள்ள வசனத்தை எடுத்து காட்டுவார்கள்.

‎الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ … (34) سورةالنساء

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித் திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

திருக்குர்ஆன் 4 : 34

நமது பதில்

இந்த வசனம் குடும்ப நிர்வாகத்தை குறிக்கிமே தவிர நீதிபதிகளாக பெண்கள் இருப்பதற்கு இதில் எந்த தடையும் இல்லை. குடும்பத்தில் மணைவிக்கு செலவளிக்கும் விடயத்தை பற்றியே இந்த வசனம் பேசுகிறது. ஒரு ஆண் அந்நியப் பெண்ணுக்கு செலவளிப்பதை பற்றி இந்த வசனம் பேச வில்லை என்றால் ஒரு கணவன் மனைவியின் குடும்ப நிர்வகத்திற்கு பொறுப்பு எனும் கருத்தில் தான் இந்த வசனம் அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது வாதம்

மேலும் காதி என்பவர் வலீயாக இருக்க வேண்டும் என்பதனால் பெண்கள் காதிகளாக நியமிக்கப்படக்கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

நமது பதில்

பெண்கள் வலீயாக இருக்ககூடாது என்பது மார்க்கத்தின் அடிப்படையில் உள்ளது. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க்க்கூடாது. ஆனால் காதி என்பவர் விலீயாக இருப்பதே நமது பிரச்சனை. காதி என்பவர் வலீயாக இருக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடாகும். காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து விட்டுச் செல்லட்டும். அவர் வலீயாக நிற்பதோ அனுமதி பத்திரம் வழங்குவதோ செய்வதில் தான் பல மோசடிகள் இடம் பெறுகிறது.

அப்படியென்றால் வலீ இல்லாத பட்சத்தில் வலீயாக நிற்பது யார் என்ற கேள்வி எழும். வலீ என்பவர் பொறுப்பாளர் ஆவார். அவர் திருமணத்தின் அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே அந்தந்த ஊரைச் சேர்ந்த ஊர் ஜமாஅத் தலைவரே வலீயாக இருக்க வேண்டும் என்பது நமது நிலைபாடாகும்.இதற்கு கீழ் காணும் ஹதீஸ் சான்றாக நிற்கிறது.

‎4745 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்து விட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் 'இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு ('மஹ்ர்' எனும் விவாகக் கொடையாக)க்கொடு!' என்று (அந்த மனிதரிடம்) கூறினார்கள். அவர், 'என்னிடம் இல்லை' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே' என்று கூறினார்கள். இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், 'குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (மனனமாக) இருக்கிறது?' என்று கேட்டார்கள். அவர் இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'உம்முடன் இருக்கும் (குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல் புகாரி 5029

இவ்வாறான ஒரு நிலைபாட்டுக்கு வரும்போது காதியாக பெண்கள் இருப்பதற்கு எந்த தடையும் வராது. ஆனால் காதி என்பவர் குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி மாத்திரமே. அவர் ஊர் ஜமாஅத் தலைவரின் விவாகரத்து செல்லு படியானதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் ஒருவர் மாத்திரமே. வேறு எதிலும் தலையிடும் அதிகாரம் அவருக்கு இருக்க்க் கூடாது.


பெண்கள் திருமன பதிவாளர்களாக இருக்க என்ன தடை இருக்கிறது?

திருமன பதிவாளர்களை பொறுத்தவரை முஸ்லிம் பெண்கள் திருமன பதிவாளர்களாக கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக ஒரு சில நடைமுறை சிக்கள்கள் காரணமாக இதை மறுத்து வருகிறார்கள்.

பொதுவாக பள்ளிவாசல்களில் தான் திருமண பதிவுகள் அதிகமான அளவில் நடைபெறுகிறது. பள்ளிவாசல்களில் திருமண பதிவுகளை நடத்தும் போது ஆண் பதிவாளர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் பள்ளிவாசலுக்கும் நுழையும் அனுமதி உண்டு என்பதால் அவரால் காலதாமதமின்றி, திருமண பதிவுகளை மேற்கொள்ளலாம். அவருக்கு குளிப்பு கடமையான நிலையில் இருந்தால் உடனே குளித்து விட்டு பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்து விடுவார். இதே பெண்களாக இருந்தால் மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் பள்ளிக்கு வருவதற்கு தடை இருப்பதனால் இதை கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இஸ்லாத்தில் பள்ளிவாசலில் திருமணத்தை பதிவு செய்யும் கட்டாயம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. திருமணத்தை பொருத்தவரை அதை பதிவு செய்பவர் திருமண ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. 

திருமண பதிவு என்பது மார்க்க ரீதியான ஒரு பொறுப்பு அல்ல. அது நாம் சட்டத்திற்காக ஏற்பாடு செய்து கொண்ட ஒன்று. எனவே திருமண பதிவாளர் இல்லாமலே திருமண ஒப்பந்த்த்தை நடாத்திக் கொள்ளலாம். திருமணத்தை குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்டாலே போதுமானது. சம்பந்தப்பட்ட குடும்பம் தான் திருமண ஒப்பந்த்த்தில் தலையிட வேண்டுமே தவிர பதிவாளருக்கு அதில் எந்த வேலையும் இல்லை.

‎فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ…(25) سورة النساء

அவர்களின் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 4 25

எனவே ஒரு திருமணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியுடன் செய்து கொண்ட பிறகு திருமண பதிவாளரை அணுகி அதை பதிவு செய்து கொள்ளலாம். திருமண நிகழ்விற்கு திருமண பதிவாளர் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லாத்தனால் திருமண பதிவாளர் எனும் முறையில் பெண்கள் இருப்பதிலும் எந்த நடைமுறை சிக்களும் ஏற்படாது.

 காதி நீதிமன்றங்கள் சீர் திருத்தம் செய்யப்பட வேண்டும்!

குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இறைவன் ஏற்படுத்திய வழிமுறையை சரியாக நாம் புரிநது கொள்ள வேண்டும். இறைவன் நான்கு வழிமுறைகளை குறிப்பிடுகிறான். அதில் இறுதி வழிமுறை தான் கணவன் மற்றும் மனைவியின் குடும்பம் சார்பாக நடுவர்களை ஏற்படுத்தி அவர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது என்பது.

இதை பற்றி இறவைன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, 

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

 1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள்

01. முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த சட்டமாக இருந்தாலும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹ் அருளியதை கொண்டே தீர்பழிக்க வேண்டும்.

…وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ 

(44) سورة المائدة

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

திருக்குர்ஆன் 5:44

தப்ஸ் அடிக்கலாமா? திருமணத்தை வீடியோ எடுக்கலாமா?

 தப்ஸ் அடிக்கலாமா?

பதில்:

இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

பார்க்க : இசை ஹராமா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பெண்கள் தஃப் அடித்து வரவேற்றார்கள் என்ற செய்தி பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தஃப் (கொட்டு) எனப்படும் தோலால் செய்யப்பட்ட கருவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசைக்கருவியின் வகையில் சேர்க்கவில்லை.

இந்தக் கருவியின் மூலம் திருமணம் மற்றும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் ஓசை எழுப்பும் வழக்கம் அன்றைய மதீனத்து மக்களிடம் காணப்பட்டது. இசையைத் தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுக்காதது மட்டுமின்றி அனுமதித்தும் உள்ளனர்.

சங்கீதத்தில் காணப்படுவது போன்ற ராகங்கள் இதில் இருந்து வெளிப்படாமல் கரடுமுரடான சப்தம் மட்டுமே வெளிப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை இசைக்கருவியில் சேர்க்காமல் விட்டிருக்கலாம்.

صحيح البخاري4001 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ»

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அங்கு சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே! முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 4001, 5147

صحيح البخاري987 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى»،

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மினாவின் நாட்களில் என் அருகில் (அன்ஸாரிச்) சிறுமியர் இருவர் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) தம் முகத்தைவிட்டு ஆடையை விலக்கி, அவ்விருவரையும் விட்டு விடுங்கள்! அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும் என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) மினாவின் நாட்களாக அமைந்திருந்தன. நூல் : புகாரி : 987

ஆனால் சில ஊர்களில் தப்ஸ் சபை என்று வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு செல்வதற்கும், அசிங்கமான அங்க அசைவுகள் செய்வதற்கும் இது ஆதாரமாகாது. மேலும் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்பதை மீறும் வகையில் கூலி கொடுத்து பொருள் செலவு செய்து தப்ஸ் கச்சேரி நடத்துவதற்கும் இது ஆதாரமாகாது.

ஆட்டம் பாட்டம் இல்லாமல் தப்ஸ் எனும் கொட்டு அடித்து அதில் மகிழ்ச்சி அடைவதை மார்க்கம் தடுக்கவில்லை. சில நேரங்களில் நம்மை அறியாமல் சில ராகங்களின் போது கைவிரல்கள் தாளம் போடுவதுண்டு. அது போன்றதாகத் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இசைக்கருவிகள் தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

-- P.JAINUL ABIDEEN

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

 சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம்.

இந்த ஹதீஸ் குறித்து கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், இது பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும்,  வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

 நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

முஹம்மது நபி அவர்கள் ஆறு வயது ஆயிஷாவை ஏன் திருமணம் செய்து கொண்டார்கள்.?

ஹபீபுல்லாஹ்

பதில் :

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : புகாரி 5133

ஆயிஷா (ரலி) அவர்களை பருவ வயது அடைவதற்கு முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

அகில உலகுக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமியைத் திருமணம் செய்தது நியாயமானது தானா? என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுமையைத் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் சிறுமியைத் திருமணம் செய்யலாமா என்பது முஸ்லிம்களில் பலருக்கு இருக்கும் சந்தேகம்.

இது குறித்து தக்க முறையில் அறிந்து கொண்டால் இரு சாராரின் சந்தேகமும் முற்றாக விலகி விடும்.

பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?

 பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?


உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்!


நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் சேட்டைகள் ஆகிய அனைத்திற்கும் சினிமா கூத்தாடிகளும், சினிமாவும், மெகா சீரியல்களும் தான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உண்மையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதோ அந்தத் தீர்ப்பு :

Search This Blog