தப்ஸ் அடிக்கலாமா?
பதில்:
இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
பார்க்க : இசை ஹராமா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பெண்கள் தஃப் அடித்து வரவேற்றார்கள் என்ற செய்தி பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தஃப் (கொட்டு) எனப்படும் தோலால் செய்யப்பட்ட கருவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசைக்கருவியின் வகையில் சேர்க்கவில்லை.
இந்தக் கருவியின் மூலம் திருமணம் மற்றும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் ஓசை எழுப்பும் வழக்கம் அன்றைய மதீனத்து மக்களிடம் காணப்பட்டது. இசையைத் தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுக்காதது மட்டுமின்றி அனுமதித்தும் உள்ளனர்.
சங்கீதத்தில் காணப்படுவது போன்ற ராகங்கள் இதில் இருந்து வெளிப்படாமல் கரடுமுரடான சப்தம் மட்டுமே வெளிப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை இசைக்கருவியில் சேர்க்காமல் விட்டிருக்கலாம்.
صحيح البخاري4001 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ»
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அங்கு சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே! முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி : 4001, 5147
صحيح البخاري987 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى»،
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மினாவின் நாட்களில் என் அருகில் (அன்ஸாரிச்) சிறுமியர் இருவர் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) தம் முகத்தைவிட்டு ஆடையை விலக்கி, அவ்விருவரையும் விட்டு விடுங்கள்! அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும் என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) மினாவின் நாட்களாக அமைந்திருந்தன. நூல் : புகாரி : 987
ஆனால் சில ஊர்களில் தப்ஸ் சபை என்று வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு செல்வதற்கும், அசிங்கமான அங்க அசைவுகள் செய்வதற்கும் இது ஆதாரமாகாது. மேலும் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்பதை மீறும் வகையில் கூலி கொடுத்து பொருள் செலவு செய்து தப்ஸ் கச்சேரி நடத்துவதற்கும் இது ஆதாரமாகாது.
ஆட்டம் பாட்டம் இல்லாமல் தப்ஸ் எனும் கொட்டு அடித்து அதில் மகிழ்ச்சி அடைவதை மார்க்கம் தடுக்கவில்லை. சில நேரங்களில் நம்மை அறியாமல் சில ராகங்களின் போது கைவிரல்கள் தாளம் போடுவதுண்டு. அது போன்றதாகத் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இசைக்கருவிகள் தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
-- P.JAINUL ABIDEEN
திருமணத்தை வீடியோ எடுக்கலாமா?
ஆயிஷா
பதில் :
எளிமையான முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணம் என்று மார்க்கம் கூறுகின்றது.
مسند أحمد24529 – حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً "
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத்
திருமணத்தில் தேவையற்ற செலவுகளும், வீண் விரையங்களும், ஆடம்பரங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த நபிமொழிக்குள் அடங்கியுள்ளது.
வீடியோ எடுப்பதில் பயன் இருக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்துத் தான் அதற்காகச் செலவிடலாமா? செலவிடக் கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்
திருமணக் காட்சிகளை வீடியோ எடுப்பதில் ஏதாவது நன்மை இருந்தால் அதற்காகச் செலவிடுவது தவறல்ல. உதாரணமாக நபிவழி அடிப்படையில் நடக்கும் திருமணத்தில் மார்க்கச் சொற்பொழிவு ஆற்றப்படுகின்றது. இந்தச் சொற்பொழிவை வீடியோ எடுத்து அதை இன்னும் பலர் கேட்பதால் அவர்களுக்கு நல்ல அறிவுரை கிடைக்கும் என்றால் அது பயனுள்ள செலவாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை வீடியோ எடுத்து மற்றவர்களை பார்க்கச் செய்வது வீண் விரையமாகாது. இதற்காகச் செலவிடுவது தவறல்ல.
ஆனால் இன்றைக்குப் பல திருமணங்களில் எந்தப் பயனும் இல்லாமல் வீடியோ எடுக்கப்படுகின்றது. திருமணத்துக்கு வருபவர்களையும், செல்பவர்களையும் வீடியோ எடுக்கின்றனர். மணமகனையும், மணமகளையும் வீடியோ எடுக்கின்றனர்.
பெண்கள் தங்களுடைய அலங்காரங்களை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்துவதும், அந்நிய ஆண்கள் அந்த அலங்காரங்களைப் பார்த்து ரசிப்பதும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு வரும் அனைத்து பெண்களும் அலங்காரம் செய்துகொண்டே வருகின்றனர். வீடியோ எடுப்பவன் இந்தப் பெண்களை அவர்களின் அலங்காரத்துடன் படம் எடுக்கிறான். இதனால் இந்தத் திருமணத்தில் இஸ்லாமிய ஒழுக்கம் மீறப்படுகின்றது.
நமது வீட்டுப் பெண்களை அந்நியன் எவனோ படம் எடுத்தால் கோபம் வருகிறது. இந்தக் கோபம் நியாயமானது. நன்மையானது. இதே காரியத்தைத் தான் கல்யாண நிகழ்ச்சியிலும் செய்கிறார்கள். இதை மட்டும் நாம் எப்படி அனுமதிக்கலாம்?
எந்த நன்மையும் தராத காட்சிகளை வீடியோ எடுத்தால் அதில் பொருளாதாரம் விரையமாகுவதைத் தவிர எந்த நன்மையுமில்லை. எனவே இந்த வீண் விரையத்தைத் தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமின்றி வீடியோ எடுத்து தருபவர்கள் அதில் ஒரு பிரதியை வைத்துக் கொண்டு தங்கள் நண்பர்களுடன் அதைப் பார்த்து அசிங்கமான விமர்சனம் செய்வதும் நம் காதுகளுக்கு வருகிறது. இன்னும் சிலர் வீடியோவில் எடுக்கப்பட்ட காட்சியில் முகத்தை மாற்றி அல்லது முகத்தை வைத்துக் கொண்டு உடலை மாற்றி ஆபாச வீடியோக்களாக இணைய தளங்களில் வெளியிடுவதும் நடக்கிறது. இதனால் நல்ல பெண்கள் பலரின் குடும்ப வாழ்க்கை நாசமாகப் போகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நடந்து கொள்பவன் தான் மானமுள்ள சரியான முஸ்லிமாவான்.
--P.JAINUL ABIDEEN
share this .. https://bit.ly/3V32dhx
சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?
https://rb.gy/34vmg6
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகள்
https://rb.gy/nkl7jf
இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா?
https://rb.gy/rqpnlo
விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமைச் சட்டம் சரியா?
https://rb.gy/mv9tbz
நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?
https://rb.gy/ksjnhi
நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?
https://rb.gy/2omwhn
பால்ய விவாகம் கூடுமா?
https://rb.gy/natzps
பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன?
https://rb.gy/yn3x45
திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?
https://makarimtec.blogspot.com/2023/01/pen-veettu-virunthu.html
ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?
https://makarimtec.blogspot.com/2023/01/wedding.html
திருமண விருந்தின் அளவு என்ன?
https://makarimtec.blogspot.com/2023/01/valeema.html
திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையே?
https://makarimtec.blogspot.com/2023/01/weds.html
