பல்லிக்குப் பகுத்தறிவு?
பைத்தியம் முத்திப்போன ஜாக்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள், "அது இப்ராஹீம் (அலை) (அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது'' என்றும் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஷுரைக் (ரலி),
நூல்: புகாரி 3359
புகாரியில் இடம் பெறும் பல்லி தொடர்பான இந்த ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
அதை விரிவாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்து தக்க ஆதாரங்களுடன் முன்னரே, ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் எழுதியிருந்தோம்.
பல வருடங்களாக இது தொடர்பான வாதங்களுக்கு யாராலும் பதிலளிக்கப்படாத நிலையில் கோமா நிலையில் இருந்த, தற்போதும் அவ்வாறே இருக்கின்ற ஜாக் அண்மையில் இதற்குப் பதில் சொல்கிறேன் என வெகுண்டெழுந்து புறப்பட்டு வந்தது. ஏப்ரல் 2013 அல்ஜன்னத் இதழில் பல்லி ஹதீஸ் தொடர்பான நம்முடைய வாதங்களை முன்வைத்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டியிருந்தது.
அந்தோ பரிதாபம்! நாம் எழுப்பியிருந்த வலுவான வாதங்களுக்கு ஜாக் அளித்திருந்த பதில் தனக்கு கோமா நிலை உண்டென்பதை சந்தேகமறப் பறைசாற்றும் வகையில் பல உளறல்களையும், முரண்பாடுகளையும், கிறுக்குத்தனமான வாதங்களையும் உள்ளடக்கியிருந்தது.