தவ்ஹீத் ஜமாஅத் video's: ஹதீஸ்-ஆய்வு
Showing posts with label ஹதீஸ்-ஆய்வு. Show all posts
Showing posts with label ஹதீஸ்-ஆய்வு. Show all posts

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே!

 நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று தரம் பிரிப்பது நபித்தோழர்களுக்கு அடுத்த நிலையில் வரும் அறிவிப்பாளர்களில் இருந்து தான் பார்க்கப்படுகின்றது. நபித்தோழர்களை, அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தரம் பிரித்துப் பார்ப்பது ஹதீஸ் கலைவிதியில் இல்லை.

நபித்தோழர்களை ஏன் தரம் பிரிப்பதில்லை? நபியவர்கள் கூறியதாக அறிவிக்கும் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?

 மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?

ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று காரணம் கூறி அவர் அறிவிக்கும் ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதை நாம் அறிந்துள்ளோம்.

இந்த விதியை அதிகமான மக்கள் மேலோட்டமாகவே அறிந்துள்ளனர்.

எனவே இந்த விதியை முழுமையாக விளக்கவே இந்தப் பதிவு.

அறியப்படுதல் என்றால் என்ன?


ஒரு நபர் அல்லது ஒரு செய்தி அறியப்படுதல் என்றால் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது பொருளல்ல. அனைவரைப் பற்றியும், அனைத்தைப் பற்றியும் அனைவரும் அறிந்திருக்க முடியாது.

அறியப்படுதல் என்றால் நம்பகமான யாராவது அறிந்திருப்பதாகக் கூறினால் அவர் அறியப்பட்டவர் ஆவார். பலருக்கு அவரைப் பற்றி தெரியாத காரணத்தால் அறியப்படாதவர் எனக் கூற முடியாது.

உதாரணமாக சாலிம் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் ஒரு ஹதீஸில் இடம் பெறுகிறார். இவரைப் பலரும் அறியப்படாதவர் என்கிறார்கள். அல்லது அவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் எதுவும் கூறாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சில  ஹதீஸ்கலை அறிஞர்கள் மட்டும் அவரைத் தெரியும் என்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.

பலருக்கு ஒருவரைப் பற்றி தெரியாததால் யாருக்குமே தெரியாது என்று கூறமுடியாது.

உலக நபி ஒளியால் உருவானவர்களா?

 உலக நபி ஒளியால் உருவானவர்களா?

 கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான் தான். என்னை அல்லாஹ்வுடைய அடியான் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்துவிட்டார்கள்.

மேலும், என் மீது யார் வேண்டுமென்றே பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதனை எச்சரிக்கை செய்தார்களோ அத்தகைய வழிகேட்டில் சமுதாயம் வீழ்ந்து விட்டது.

ஆமீன்|| சொல்லுகின்றபோது யூதர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்பது கூட்டு ஆவுக்கு ஆதாரமா

 கூட்டு துஆவுக்கு ஆதாரம் காட்டுகிறார் –

– தொழுகைகளுக்குப் பின்னும் ஏனைய சந்தர்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர் ஆமீன் கூறும்  முறைக்கு கூட்டு துஆ எனப்படுகிறது.  கூட்டு துஆவுக்கு ஆதாரங்கள் உண்டு எனக் கூறி சில ஹதீஸ்களை முன்வைத்து மரியாதைக்குரிய முஹம்மது சூபி (இம்தாதி) மவ்லவி அவர்கள்  ஒரு பிரசுரததை வெளியிட்டார்கள்.

மூஸா நபியின் துஆ விட்கு ஹாரூன் (அலை) ஆமீன் சொன்னார்களா ?

 மூஸா நபியின் துஆ விட்கு ஹாரூன் (அலை) ஆமீன் சொன்னார்களா ?

ஐவேளைத் தெழுகைக்குப் பிறகு இமாம் மைக் வைத்து சப்தமிட்டு துஆச்செய்வதையும், பின்னால் உள்ளவர்கள் (அதன் பொருள் கூட விளங்காமல்) ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுவதையும் பார்க்கிறோம்.

மேலும் மாநாடு, பொதுக்கூட்டங்கள் முடிவிலும் ஒருவர் சப்தமிட்டு துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் கூறுவதையும் காண்கிறோம்.

இதைப் போன்று குர்ஆன் ஓதி முடிக்கும் போது, கத்தம் ஃபாத்திஹாக்கள் என்ற பித்அத்தை நிறைவேற்றும் போது, வீடு குடி புகும் போது, மவ்லிது ஓதும் போது, திருமணம் நடக்கும் போது, மண்ணறையில் அடக்கம் செய்யும் போது இப்படிப் பல இடங்களில் திருமறைக் குர்ஆனின் (7:55) வசனத்தை நேரடியாக மீறுவதைக் காண்கிறோம்.

கூட்டு துஆ ஹாமித் பக்ரியின் ஆதாரம் சரியானதா

 கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆ ஹாமித் பக்ரியின் ஆதாரம்

இது குறித்து ஏகத்துவம் ஆகஸ்ட் 2010 இதழில் விளியான ஆய்வுக் கட்டுரையை
இதற்கு பதிலாகத் தருகிறோம்.

மறு ஆய்வு கூட்டு துஆ

....பித்அத்தின் உச்சக்கட்ட சபையான புகாரி சபையில் ஹாமித் பக்ரி மற்றொரு வாதத்தையும் எடுத்து வைத்துள்ளார். அது தான் கூட்டு துஆ ஓதலாம் என்பதாகும். இதே ஹாமித் பக்ரி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த போது கூட்டு துஆவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்.

கூட்டு துஆ தொடர்பாக ஏற்கனவே ஏகத்துவத்தில் ஆய்வுத் தொடர்களை வெளியிட்டிருந்தாலும் தற்போது புதிதாக சில வாதங்களை ஹாமித் பக்ரி முன்வைத்திருப்பதால் அவற்றுக்குப் பதிலளிப்பது நமது கடமை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை இங்கே பதியப்படுகின்றது.

பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா? வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

 பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா?

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.   அல்குர்ஆன் 7:3

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!அல்குர்ஆன் 6:106

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.   அல்குர்ஆன் 43:43, 44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.  அல்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.   அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். அல்குர்ஆன் 5:47

மேற்கண்ட இறைவசனங்களும், இன்னும் நூற்றுக் கணக்கான இறைவசனங்களும், நபிமொழிகளும் இறைச் செய்தி மட்டும்தான் மார்க்கம் என்ற தூய கொள்கையைப் பறைசாற்றுகின்றன.

நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா?

ஒளியால்
 நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா
?


எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் "ஷபாஅத்' எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், "மகாமுன் மஹ்மூத்' என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் ஓர் ஆய்வு

நெஞ்சில் கைகளைக் கட்டுதல்

 நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்


தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை
வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக அனேக முஸ்லிம்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டி தொழ ஆரம்பித்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்!

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள், இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்றால், நெஞ்சில் கை கட்டும் ஹதீஸும் பலவீனமானது தான் என்று எதிர்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்குச் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், இது பற்றி ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று இன்னும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் உண்மையாகவே பலவீனமானது தானா? என்பதையும், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா? என்பது பற்றியும் மறு ஆய்வு செய்ய நாம் முன் வந்தோம்.

மறு ஆய்வுக்குப் பின்னரும் நமது முந்தைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவுக்கே மீண்டும் வருகிறோம்.

மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்பு நடந்ததா?

 நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 25

அப்துல்லாஹ் பின் அபீ நமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்:  நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்” என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், “இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்” என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில் - (உறக்க நிலையில்) - அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்: அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்: அவர்களுடைய உள்ளங்கள் உறங்கமாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள். புகாரி - 3570

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தனக்கு வஹீ வருவதற்கு முன்பே அதாவது தான் நபியாவதற்கு முன்பே மிஃராஜ் பயணம் அழைத்து செல்லப்பட்டதாக மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

மாடு உழவு செய்வதற்காக மட்டும் தான் படைக்கப்பட்டதா?

  நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 24

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் இன்னுமோர் பிரதான செய்தியாக இருப்பது மாடு பேசிய செய்தி பற்றிய ஹதீஸாகும். இது பற்றி இங்கு விபரமாகப் பார்ப்போம்.

 174  ஃ4( (صحيح البخاري 3471 - ،َ ةَ مَ لَ ي سِ بَ أْ نَ، عِ جَ رْ عَ الأِ نَ، عِ ادَ نِّ و الزُ بَا أَ نَ ثَّ دَ، حُ انَ يْ فُ ا سَ نَ ثَّ دَ، حَِّ اللهِ دْ بَ عُ نْ بُّ يِ لَ ا عَ نَ ثَّ دَ ح َّ مُ، ثِ حْ بُّ الصَ ةَ لاَ، صَ مَّ لَ سَ وِ هْ يَ لَ عُى اللهَّ لَ صَِّ اللهُولُ سَى رَّ لَ : صَ الَ، قُ هْ نَ عَُّ اللهَ يِ ضَ رَ ةَ رْ يَ رُ ي هِ بَ أْ نَ ع اََّ نِا، إَ ذَِ له ْ قَ لُْ نخَْ ا لمَّ نِ: إْ تَ الَ قَا، فَ هَ بَ رَ ضَا فَ هَ بِ كَ رْ ذِ إً ةَ رَ قَ بُوقُ سَ يٌ لُ جَا رَ نْ يَ : “ بَ الَ قَ، فِ اسَّى النَ لَ عَ لَ بْ قَ أ ،ٍ رْ كَو بُ بَ أَ ا وَ نَا، أَ ذَ هِ بُ نِومُي أِّ نِ إَ : “ فَ الَ قَ، فُ مَّ لَ كَ تٌ ةَ رَ قَ بَِّ اللهَ انَ حْ بُ : سُ اسَّ النَ الَ قَ “ فِ ثْ رَ حْ لِا لَ نْ قِ لُ خ ىَّ تَ حَ بَ لَ طَ، فٍ اةَ شِا بَ هْ نِ مَ بَ هَ ذَ، فُ بْ ئِّ ا الذَ دَ عْ ذِ إِ هِ مَ نَ غِ في ٌ لُ جَا رَ مَ نْ يَ بَ - وَّ مَا ثَ مُا هَ مَ، - وُ رَ مُ عَ و اََ له َ يِ اعَ رَ لاَ مْ وَ، يِ عُ بَّ السَ مْ وَا يََ له ْ نَ مَ، فِّ نيِا مَ هَ تْ ذَ قْ نَ تْ ا: اسَ ذَ هُ بْ ئِّ الذُ هَ لَ الَ قَ، فُ هْ نِ ا مَ هَ ذَ قْ نَ تْ اسُ هَّ نَ أَ ك ،ُ رَ مُ عَ وٍ رْ كَو بُ بَ أَ ا وَ نَا أَ ذَ هِ بُ نِومُي أِّ نِ إَ : “فَ الَ، قُ مَّ لَ كَ تَ يٌ بْ ئِ ذَِّ اللهَ انَ حْ بُ : سُ اسَّ النَ الَ قَي “ فِْ يرَ غ يِ بَ أْ نَ، عَ يمِ اهَ رْ بِ إِ نْ بِ دْ عَ سْ نَ، عٍ رَ عْ سِ مْ نَ، عُ انَ يْ فُ ا سَ نَ ثَّ دَ، حٌّ يِ لَ ا عَ نَ ثَّ دَ -” ، وحَّ مَا ثَ مُا هَ مَ - و ِ هِ لْ ثِِ : بَ مَّ لَ سَ وِ هْ يَ لَ عُى اللهَّ لَ صِِّ بيَّ النِ نَ، عَ ةَ رْ يَ رُ ي هِ بَ أْ نَ، عَ ةَ مَ لَ س 5  ஃ5( (صحيح البخاري 3663 - ِ دْ بَ عُ نْ بَ ةَ مَ لَ و سُ بَي أِ نََ برْ خَ: أَ الَ، قِّ يِ رْ هُّ الزِ نَ، عٌ بْ يَ عُ ا شَ نََ برْ خَ، أِ انَ مَو اليُ بَا أَ نَ ثَّ دَ ح َ مَّ لَ سَ وِ هْ يَ لَ عُى اللهَّ لَ صَِّ اللهَولُ سَ رُ تْ عَِ :سم َ الَ، قُ هْ نَ عَُّ اللهَ يِ ضَ رَ ةَ رْ يَ رُ ا هَ بَ أَّ نَ، أٍ فْ وَ عِ نْ بِ نَْ حمَّ الر َ تَ فَ تْ الَي، فِ اعَّ الرُ هَ بَ لَ طَ فً اةَ ا شَ هْ نِ مَ ذَ خَ أَ ، فُ بْ ئِّ الذِ هْ يَ لَ ا عَ دَ عِ هِ مَ نَ غِ في ٍ اعَஸ ر 6: ا ஜص َ مَ نْ يَ : “ بُولُ قَ ي َ لََ حمْ دَ قً ةَ رَ قَ بُوقُ سَ يٌ لُ جَا رَ مَ نْ يَ بَ ي؟ وِْ يرَ غٍ اعَا رََ له َ سْ يَ لَ مْ وَ، يِ عُ بَّ السَ مْ وَا يََ له ْ نَ: مَ الَ قَ فُ بْ ئِّ الذِ هْ يَ لِ إ :ُ اسَّ النَ الَ “ قِ ثْ رَ حْ لِ لُ تْ قِ لُ خِّ نيِ كَ لَ ا وَ ذَِ له ْ قَ لْ خُ أَْي لمِّ نِ: إْ تَ الَ قَ، فُ هْ تَ مَّ لَ كَ فِ هْ يَ لِ إْ تَ تَ فَ تْ الَا، فَ هْ يَ لَ ع ِ ابَّ طَ الخُ نْ بُ رَ مُ عَ، وٍ رْ كَو بُ بَ أَ ، وَ كِ لَ ذِ بُ نِومُي أِّ نِ إَ : “فَ مَّ لَ سَ وِ هْ يَ لَ عُى اللهَّ لَ صُِّ بيَّ النَ الَ، قَِّ اللهَ انَ حْ بُ س اَ مُ هْ نَ عَُّ اللهَ يِ ضَ ر“

அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸ_ப்ஹ_த் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, “(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, “நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனச் சொன்னார்கள். மக்கள், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?” என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நானும், அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, நபி (ஸல்) அவர்கள், “ஒரு மனிதர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக்) கொண்டு சென்று விட்டது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றி விட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, “இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றி விட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக  முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே' என்று கூறியது” எனச் சொன்னார்கள். இதைக் கேட்ட மக்கள், “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) ஓநாய் பேசுமா?” என்று கேட்டார்கள். நபி  (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை. புகாரி - 3471

நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?

நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 23

குர்ஆனுக்கு மாற்றமான கருத்தைத் தருகின்றது என்று நாம் கூறும் செய்திகளில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியும் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்களுடைய ஒழுக்க வாழ்வை கேள்விக்குற்படுத்தும் விதமாக, நபியவர்கள் அன்னியப் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தார்கள் என்றும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தலையில் பெண் பார்த்து விட்டார்கள் என்றும் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், அன்னியப் பெண்களுக்கு மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரை முறைகளையும் சமுதாயத்திற்கு தெளிவாக கற்றுத் தந்த நபிகள் (ஸல்) அவர்கள் இப்படி நடக்க மாட்டார்கள், நபியவர்கள் இப்படி நடந்தார்கள் என்று நம்புவது நபியவர்களின் உயரிய ஒழுக்கத்திற்கே சந்தேகத்தை உண்டாக்குவதுடன் குர்ஆன் கூறும் செய்திகளுக்கும் இது மாற்றமாக உள்ளது என்று நாம் இந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

இதோ இதுதான் குறித்த செய்தியாகும்.

சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?

  நூல் - வஹியில் முரண்பாடா? பாகம் 22

சுலைமான் நபி தொடர்பில் புகாரியின் இடம் பெறும் கீழுள்ள செய்தியும் திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு நேர்மாற்றமாக அமைந்திருக்கின்றது. மட்டுமன்றி இஸ்லாத்தின் அடிப்படை செய்திகள் ஒன்றான மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு என்பதை தகர்த்து நபி சுலைமானுக்கும் மறைவான அறிவு உண்டு என்ற விபரீதமான கருத்தைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இது பற்றிய விபரமாக ஆராய்வோம்.

)صحيح البخاري (7ஃ  39 5242 - يِ بَ أْ نَ، عِ يهِ بَ أْ نَ، عٍ سُ اوَ طِ نْ ابِ نَ، عٌ رَ مْ عَا مَ نََ برْ خَ، أِ اقَّ زَّ الرُ دْ بَ ا عَ نَ ثَّ دَ، حٌودُ مَْ مح ِ نيَ ثَّ دَ ح ٍ ةَ أَ رْ امُّ لُ كُ دِ لَ، تٍ ةَ أَ رْ امِ ةَ ائِِ بَ ةَ لْ يَّ اللَّ نَوفُ طََ :لأ ُ مَلاَّا السَ مِ هْ يَ لَ عَ دُ اوَ دُ نْ بُ انَ مْ يَ لُ سَ الَ: « قَ الَ، قَ ةَ رْ يَ رُ ه ْ دِ لَ تَْ لمَ، وَّ نِ هِ بَ افَ طَ أَ ، فَ يِ سَ نَ وْ لُ قَ يْ مَ لَ، فَُّ اللهَ اءَ شْ نِ إْ لُ: قُ كَ لَ المُ هَ لَ الَ قَ، فَِّ اللهِ يلِ بَ سِ في ُ لِ اتَ قُا يً مَلاُ غ ،ْ ثَ نَْ يحَْ لمَُّ اللهَ اءَ شْ نِ: إَ الَ قْ وَ: « لَ مَّ لَ سَ وِ هْ يَ لَ عُى اللهَّ لَ صُِّ بيَّ النَ الَ « قٍ انَ سْ نِ إَ فْ صِ نٌ ةَ أَ رْ امَّ لاِ إَّ نُ هْ نِ م ِ هِ تَ اجَِى لحَ جْ رَ أَ انَ كَ و “

இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்” என்று கூறினார். ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கொண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார். புகாரி - 5242

சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ, நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.

காரணம் இதனை விட குர்ஆனின் கருத்துடன் மோதும் பல செய்திகள் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளன.

இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விஷயங்கள் உள்ளன. 

இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்?

 இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்?

அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்?

நழீம்.

பதில் :

ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.

எனினும் இரண்டாம் திருமணம் செய்வதின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இரண்டாம் திருமண விஷயத்தை முதல் மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

ஒரு மனைவியுடன் ஒருவன் வாழும்போது, அவனது எல்லா நாட்களையும் அவளுக்கே கொடுக்கிறான். அவளுக்கே தனது பொருளாதாரத்தையும் செலவு செய்கிறான். இந்த நிலையில் அவன் மற்றொரு திருமணம் செய்தால் முதல் மனைவிக்குக் கிடைத்து வந்த நாட்களில் பாதி நாட்கள் குறைந்து விடுகின்றன. பொருளாதாரத்திலும் பாதி பறிபோகிறது.

இரண்டாம் திருமணத்தின் மூலம் முதல் மனைவி பாதிக்கப்படும் போது, அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது.

அவ்வாறு இரண்டாம் திருமணம் பற்றி முதல் மனைவியிடம் தெரிவிக்கும் போது, அவள் ஏற்றுக் கொண்டால் பிரச்சனை இல்லை. இரண்டாம் திருமணம் செய்தால் உன்னோடு வாழ மாட்டேன் என்ற முடிவை அவள் எடுத்தால் அதற்கான உரிமை அவளுக்கு உண்டு.

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

 சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம்.

இந்த ஹதீஸ் குறித்து கடந்த காலங்களில் அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தற்போது சில அறிஞர்கள், இது பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமணம் எளிமையாகவும், சிக்கனமாகவும் தான் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆடம்பரத்தையும்,  வீண் விரயத்தையும் கண்டிக்கின்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளதால் அவர்களும் சிக்கனமான திருமணத்தையே வலியுறுத்துகின்றனர்.

Search This Blog