சத்திய பிரமாணம் செய்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு இந்த இயக்கம் ஒருநாளும் வோட்டு அரசியலுக்கு செல்லாது என்று கூறியபோது பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் முதல் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு வழிமொழிந்தார்கள் வேறுவழியின்றி.
ஆனால் அந்த கூட்டம் தங்களுக்காக வந்தது என்று தவறாக புரிந்துகொண்ட பேராசிரியர் இந்த ஆளை (PJ) கழட்டிவிட்டால்தான் இந்த கூட்டத்தை காட்டி அரசியல் நடத்தலாம் என்று எண்ணி தமுமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தவ்ஹீத் காரர்கள் என்ற தவறான கருத்தை வெளியிட்டார் அப்போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் தமீமுன் அன்சாரி ஹைதரலி போன்றவர்கள்.
அவர்களின் அரசியல் ஆசைகளை தெரிந்துகொண்ட சகோ பிஜே அவர்கள் அதிலிருந்து விலகினார்.
சகோ பிஜே அவர்கள் தமுமுகாவை உருவாக்கி அதை ஒரு பிரமாண்ட
சக்தியாக ஆக்கிக்காட்டி கலைஞரையே மிரளவைத்தவர் சகோ பிஜே அவர்கள்.
சகோ பிஜே அவர்கள் வெளியேறிய பிறகு அவர் செல்வாக்கு போய்விடும் தமுமுகாவிற்கு மட்டுமே செல்வாக்கு இருக்கும் அவரின் தவ்ஹீத் கூட்டம் செல்வாக்கை இழக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு அரசியல் பதவி இந்த கனவில் மூழ்கினார்கள்.
ஆனால் தஞ்சை மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற என்ற அமைப்பை தொடங்கி போட்ட முதல் இடஒதுக்கீட்டு பேரணி கும்பகோணத்தில் நடத்தினார் சுபஹானல்லாஹ் குடந்தை திணறியது.
தவ்ஹீத்வாதிகளே தமுமுக வளர்ச்சிக்கு காரணம் என்று உணரவைத்து பதவியாசை பிடித்தவர்கள் முகத்தில் கறியை பூசினார்.
தவ்ஹீத்வாதிகளை அல்லாஹ் பிரித்துக்காட்டினான் அல்ஹம்துலில்லாஹ்.
மிக குறுகிய காலத்தில் புதிய அமைப்பிற்கு இந்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நாம் கூட நம்பவில்லை.
ஆனால் சகோ பிஜே தலைமையில் உள்ள ஏகத்துவவாதிகளுக்கே வெற்றி வந்தது மிக சக்திவாய்ந்த பேரியக்கமாக TNTJ உருவானது.
ஆனால் ஷைத்தான் விடுவானா ? அங்கிருந்த தன் நேசத்திற்குரிய சிலருக்கு பொருளாதார மோகத்தை உண்டாக்கி
சகோ பிஜே அவர்களை தரம்கெட்ட சூழ்ச்சிகள் மூலம் வெளியேற வைத்து உல்லாசவாழ்வை நோக்கி சென்று கொள்கையில் தரம்புரண்டு அமைப்பின் நல்ல பெயரை கெடுத்தார்கள்.
இதோடு பிஜே ஒழிந்தார் அவர் மேடையேற முடியாது தவ்ஹீத் பிரச்சாரம் முடிந்தது மார்க்கத்தின் பெயரில் ஜல்சா பண்ணலாம் என்று கொட்டமடித்த தலைமை நிர்வாகிகள் தலையில் இடிவிழுந்தது.
அணைத்து கொள்கை தவ்ஹீத் வாதிகளை ஒன்றிணைத்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பை (NTF)உருவாக்கி மீண்டும் உண்மை கொள்கைவாதிகளுக்கே வெற்றி என்று நிரூபித்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.
பணமும் பதவியும் சொத்துக்களும் உள்ள ஒரு பேரியக்கம் ஒருபக்கம் (TNTJ) சத்திய கொள்கை மட்டும் உள்ள ஒரு பேரியக்கம் இங்கே (NTF)
சூழ்ச்சிக்காரர்கள் அதில்தான் வீழ்வார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே !
அன்றும் இன்றும் கொள்கையில் தடம்புரளாதவர் சகோ பிஜே அவர்கள். அந்த கொள்கையில் அவர் உறுதியாக உள்ளவரை அல்லாஹ்வின் உதவி அவருக்கே !
அவருக்காக துவா செய்வோம்.
-------------------------
மார்க்க அறிவற்ற சில அரைவேற்காடுகளின் விமர்ச்சனம்।
share this.. https://bit.ly/4bxt0rB
